சட்டத்தை மீறும் கேளிக்கை விடுதிகளுக்கு எதிராக போலிசார் தொடர் நடவடிக்கை

2 mins read

உரி­மமற்ற இர­வு­நே­ரக் கேளிக்கை விடு­தி­க­ளிலும் உண­வு­ பான கடைகளாக மாற அர­சு மானி­யம் பெற்ற கேளிக்கை விடு­தி­க­ளிலும் தொடர் சோத­னை­கள் நடத்தப்படு வதாக சட்ட, உள்­துறை அமைச்­சர் கா.சண்­மு­கம் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

கடந்­தாண்டு அக்­டோ­பர் முதல் இந்த மாதம் வரை இரண்டு வகை விடு­தி­க­ளுக்­கும் எதி­ராக போலி­சார் 202 சோத­னை­களை மேற்­கொண்­ட­னர். அதா­வது சரா­ச­ரி­யாக ஒரு நாளுக்கு ஒரு போலிஸ் சோதனை நடை­பெ­று­வ­தாக அமைச்­சர் கூறி­னார். சட்­டத்தை மீறு­வோர் மீது கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டுள்­ள­தா­க­வும் போலிஸ் சோத­னை­கள் தொட­ரும் என்­றும் அவர் சொன்­னார்.

கடந்த 12ஆம் தேதி ஒரு கேடிவி கூடத்தில் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட தொற்­றுக்­கு­ழுமத்­தின் தொடர்­பில் தற்­போது 230 பேருக்கு தொற்று ஏற்­பட்­டுள்­ளது. அதன் வழி ஜூரோங் மீன்­பி­டித் துறை­மு­கத்­தி­லும் மற்ற இடங்­க­ளி­லும் தொற்று பெரு­ம­ள­வில் பர­வி­ய­தன் கார­ண­மாக, அர­சாங்­கம் கடந்த வாரம் மீண்­டும் கடும் கட்­டுப்­பா­டு­களை அறி­வித்­தது. போலிஸ் சோத­னை­களில் பொதுபொழு­து­போக்­குச் சட்­டம், மதுக் கட்­டுப்­பாட்­டுச் சட்­டம் ஆகி­ய­வற்­றுக்கு எதி­ராக 58 சட்டமீறல்­களும் கொவிட்-19 பாது­காப்பு விதி­மு­றை­க­ளுக்கு எதி­ரான 595 மீறல்­களும் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன. அத்­து­டன் கட்­டுப்­பா­டு­கள் தொடர்­பான வெளி­நாட்டு ஊழி­யர் சட்­டம், குடி­நு­ழை­வுச் சட்­டம் உள்­ளிட்ட பல்­வேறு சட்­டங்­கள் மீறப்­பட்­ட­தற்­காக 142 கைது நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட்­ட­தாக அமைச்­சர் கூறி­னார்.

"போலிஸ் நட­வ­டிக்­கை­கள் பற்றி யாருக்கேனும் இருக்­கும் கேள்­வி­

க­ளுக்கு இது பதி­லாக இருக்­கும்: ஒரு நாளுக்கு ஒரு போலிஸ் நட­வ­டிக்கை," என்­றார் திரு சண்­மு­கம்.

2020 அக்­டோ­பர் முதல் 20 வார­யி­று­தி­க­ளி­லும் பண்­டிகை காலத்­தி­லும் போலிஸ் சோதனை நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­ட­தா­க­வும் ஒவ்­வொரு நட­வ­டிக்­கை­யி­லும் 400 உண­வு­ பா­னக் கடை­கள் சோதனை செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.