உள்ளூர்வாசியின் பங்காளிகாளி
களாக வியட்னாம் நாட்டவர் சிங்கப்பூருக்குள் நுழைவதற்கான குடிநுழைவு விண்ணப்பத்தில் 'ஆண் நண்பர்/பெண் நண்பர்' என்னும் பகுதி தவறாகப் பயன்படுத்தப் பட்டதால் கடந்த மார்ச் மாதம் அப்பகுதியை நீக்கவேண்டிய நிலை ஏற்பட்டதாக சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
கேடிவி கிருமித்தொற்றுக் குழுமம் கண்டறியப்பட்ட வேளையில் குறுகியகால வருகையாளர் அட்டையில் வியட்னாமிலிருந்து வந்திருந்த பெண்ணுக்கு முதன்முதலாக தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்தப் பெண்ணை இங்கு வரவழைக்க 'ஆண் நண்பர்/ பெண் நண்பர்' என்னும் பகுதி பயன்படுத்தப்பட்டிருந்தது.
பின்னர் அது தவறான வழியில் பயன்படுத்தப்பட்டது தெரியவந்ததும் அதுதொடர்பாக குடிநுழைவு சோதனைச்சாவடி ஆணையம் விரைவாகவும் சரியாகவும் செயல் பட்டதாக அமைச்சர் சண்முகம் குறிப்பிட்டார்.

