துவாஸ் சுத்திகரிப்பு நிலையம் அடுத்த கட்டத்தில்

சிங்கப்பூரின் முதல் ஒருங்கிணைக்கப்பட்ட நீர், கழிவுச் சுத்திகரிப்பு நிலையமான துவாஸ் நெக்சஸ் நிலையத்திற்கான பணிகள் அடுத்த கட்டத்திற்குள் அடியெடுத்துவைக்கின்றன.

நிலையம், அமைந்திருக்கும் நிலத்தை நன்கு உபயோகித்து எரிசக்தி மற்றும் வளங்களை ஆக்கபூர்வமான முறையில் பயன்படுத்தும். அடுத்த கட்டமாக ஒரு நாளைக்கு 400 டன் அளவு உணவுக் கழிவைச் சுத்தம் செய்யக்கூடிய ஆலை, 800 டன் அளவு கழிவை எரிக்கக்கூடிய ஆலை ஆகியவை அமைக்கப்படும் என்று தேசிய சுற்றுப்புற அமைப்பு தெரிவித்தது.

ஒருங்கிணைக்கப்பட்ட சுத்திகரிப்பு நிலையத்தின் முதற்கட்டக் கட்டுமானப் பணிகள் 2025ஆம் ஆண்டுக்குள் நிறைவுபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கழிவற்ற பொருளியலை வளர்க்கும் இலக்கை சிங்கப்பூர் கொண்டுள்ளது. அதற்கு இத்தகைய வசதிகள் முக்கியப் பங்கு வகிக்கும். ‘யுஇஎஸ் ஹோல்டிங்ஸ்’, ‘சைனா ஹார்பர்’ பொருளியல் நிறுவனம் ஆகிய இரண்டுக்கும் நிலையத்தைக் கட்டுவதற்கான குத்தகை வழங்கப்பட்டது. குத்தகையின் மதிப்பு 428 மில்லியன் வெள்ளி.

இரண்டு நிறுவனங்களும் சேர்ந்து நிலையத்தைக் கட்டும். துவாஸ் நெக்சசில் இரண்டு மாபெரும் ஆலைகள் இடம்பெறும். அவற்றில் ஒன்றான நீர் சுத்திகரிப்பு ஆலை பியுபி எனப்படும் பொதுப் பயனீட்டுக் கழகத்தின் கீழ் வரும். மற்றொன்று ஒருங்கிணைக்கப்பட்ட சுத்திகரிப்பு ஆலை. அதை தேசியச் சுற்றுப்புற அமைப்பு நிர்வகிக்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!