மொத்த வேலைகள் குறைவு; வேலையின்மை குறைந்தது

மொத்த வேலைகள் குறைவு; வேலையின்மை குறைந்தது

2 mins read

2வது காலாண்டின் தொழிலாளர் சந்தை நிலவரம்

சிங்­கப்­பூ­ரில் கடந்த மே, ஜூன் மாதங்­களில் கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் கடு­மை­யாக்­கப்­பட்­டன. இதன் தாக்­கம் தொழி­லா­ளர் சந்தை­யில் எதி­ரொ­லித்­தது.

இந்த ஆண்­டின் இரண்­டா­வது காலாண்­டில் வேலை பார்த்த ஊழி­யர்­க­ளின் எண்­ணிக்கை குறைந்­த­தாக மனி­த­வள அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

வெளி­நாட்டு வீட்டுவேலை பணிப்­பெண்­க­ளைச் சேர்க்­கா­மல் பார்க்­கும்­போது மொத்த வேலை­களில் 15,700 வேலை­கள் குறைந்­தன.

மே மாதம் 16ஆம் தேதி முதல் ஜூன் 13 வரை நடப்­பில் இருந்த கட்­டுப்­பா­டு­கள் கார­ண­மாக சிங்­கப்­பூர் வாசி­க­ளுக்­கான வேலை வாய்ப்­பு­கள் சிறி­த­ளவே கூடின.

வெளி­நாட்டு ஊழி­யர்­கள் சிங்­கப்­பூ­ருக்­குள் வர தொடர்ந்து கட்டுப்­பா­டு­கள் நடப்­பில் இருந்து வரு­வ­தன் விளை­வாக வெளி­நாட்­டி­ன­ருக்­கான வேலை­களில் பெரும் இறக்­கம் காணப்­பட்­டது.

சிங்­கப்­பூர்வாசி­க­ளுக்­கான வேலை­களில் ஏற்­பட்ட அதி­க­ரிப்பு இந்த இறக்­கத்தை ஈடு­செய்ய போது­மான அள­வுக்கு இல்லை.

மனி­த­வள அமைச்சு தன்­னு­டைய தொழி­லா­ளர் சந்தை அறிக்­கை­யில் சிங்­கப்­பூர்வாசி­க­ளுக்­கும் வெளி­நாட்­டி­ன­ருக்­கும் வேலை வாய்ப்­பு­களில் ஏற்­பட்ட மாற்­றங்கள் தொடர்­பான குறிப்­பிட்ட புள்­ளி­வி­வ­ரங்­க­ளைத் தெரி­விக்­க­வில்லை.

செப்­டம்­பர் மாதம் வெளி­யி­டப்­படும் இரண்­டா­வது காலாண்டு முழுமையான அறிக்­கை­யில் பல விவ­ரங்­களும் தெரி­ய­வ­ரும்.

இத­னி­டையே, வேலை­யின்மை விகி­தம் சென்ற மாதம் தொடர்ந்து குறைந்­தது. மே மாதம் மொத்த வேலை­யின்மை விகி­தம் 2.8 விழுக்­கா­டாக இருந்­தது. அது 2.7 விழுக்­கா­டா­கக் குறைந்­தது.

சிங்­கப்­பூர் வாசி­க­ளுக்­கான வேலை­யின்மை விகி­தம் மே மாதம் 3.8 விழுக்­கா­டாக இருந்­தது. சென்ற மாதம் அது 3.7 விழுக்­கா­டா­கக் குறைந்­தது.

சிங்­கப்­பூர் குடி­மக்­க­ளுக்­கான வேலை­யின்மை விகி­தம் சென்ற மாதம் 3.8 விழுக்­கா­டுக்கு இறங்­கி­யது. சென்ற மாதம் சிங்­கப்­பூரில் வேலை­யில்­லா­மல் இருந்த குடி­மக்­கள், நிர்ந்­த­ர­வா­சி­க­ளின் எண்­ணிக்கை 86,600.

இது கடந்த மார்ச் மாதத்­தில் 95,500 ஆக இருந்­தது.

இத­னி­டையே, முந்­தைய காலாண்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில் 2வது காலாண்டில் ஆட்­கு­றைப்பு­கொஞ்­சம் கூடி 2,500 ஆக இருந்தது. இந்த நில­வ­ரம் பற்றி கருத்து தெரி­வித்த மனி­த­வள அமைச்­சர் டாக்டர் டான் சீ லெங், மீட்­சிக்­கான பாதை பல திருப்­பங்­களைக் கொண்­ட­தாக இருக்­கிறது என்று தெரி­வித்­தார்.

இருந்­தா­லும் ஒன்­றா­கச் சேர்ந்து கொவிட்-19 தொற்­றைச் சமா­ளித்து வலு­வாக நாம் மீண்டு எழு­வோம் என்று தான் நம்­பு­வ­தா­க­வும் அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

இத­னி­டையே, மனி­த­வள அமைச்­சின் ஆகப் புதிய புள்­ளி­வி­வ­ரங்­கள் பற்றி கருத்­து­ரைத்த சில வல்­லு­நர்­கள், அவை ஊக்­க­மூட்­டு­வ­தா­கக் கூறி­னர்.

இருந்­தா­லும் தொழி­லா­ளர் சந்தை, கொவிட்-19க்கு முந்­தைய அளவை விரை­வில் எட்­டி­வி­டும் என்­ப­தற்­கான வாய்ப்­பு­கள் அவ்­வ­ள­வாக இல்லை என்று அவர்­கள் கருத்து தெரிவித்தனர்.