ஜூரோங் மீன்பிடித் துறைமுகத் தொற்றுக் குழுமம் 1,000ஐ கடந்தது; சமூக அளவில் 117 பேர் பாதிப்பு

ஜூரோங் மீன்பிடித் துறைமுகத் தொற்றுக் குழுமம் 1,000ஐ கடந்தது; சமூக அளவில் 117 பேர் பாதிப்பு

1 mins read

நேற்­றைய நில­வ­ரப்­படி சமூக

அள­வில் மேலும் 117 பேருக்கு கொவிட்-19 கிருமி பர­வி­யுள்­ளது.

அவர்­களில் 26 பேர் ஜூரோங் மீன்­பி­டித் துறை­முக கொவிட்-19 குழு­மத்­து­டன் தொடர்­பு­டை­ய­வர்­கள்.

இதன்­மூ­லம் அக்­கு­ழு­மத்­தில் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை 1,025ஆக அதி­க­ரித்­துள்­ளது.

கேடிவி குழு­மத்­து­டன் தொடர்­பு­டைய மேலும் ஒரு­வ­ருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளது.

கேடிவி குழு­மத்­தில் இது­வரை 251 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

சமூக அள­வில் புதி­தா­கப் பாதிக்­கப்­பட்­டுள்ள 117 பேரில் 67 பேர் கொரோ­னா­வால் ஏற்­கெ­னவே பாதிக்­கப்­பட்­டோ­ரு­டன் தொடர்­பில் இருந்­த­வர்­கள்.

அவர்­கள் அனை­வ­ரும் முன்­ன­தா­கவே தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­ட­தாக சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

கண்­கா­ணிப்பு மூலம் எட்டு பேருக்கு கிரு­மித்­தொற்று இருப்­பது தெரி­ய­வந்­தது.

மீத­முள்ள 42 பேருக்­கும் ஏற்­கெ­னவே பாதிக்­கப்­பட்­டோ­ருக்­கும் இடையே எவ்­வித தொடர்­பும் இல்லை.

இதற்கிடையே, வெளி­நாடுகளிலிருந்து வந்த மூவ­ருக்கு கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளதாக தெரிவிக்கப்பட்டது.