மூத்தோரில் ஐவரில் ஒருவர் தடுப்பூசிக்குப் பதியவில்லை

மூத்தோரில் ஐவரில் ஒருவர் தடுப்பூசிக்குப் பதியவில்லை

1 mins read

எழு­பது வய­தும் அதற்­கும் மேற்­பட்­டோ­ரில் ஐவ­ரில் ஒரு­வர் கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள இன்­னும் பதிவு செய்­ய­வில்லை என்று நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

ஒட்­டு­மொத்­த­மாக, 96,000க்கும் மேற்­பட்ட மூத்­தோர் தடுப்­பூ­சிக்­குப் பதிவு செய்­ய­வில்லை என்று சுகா­தார மூத்த துணை அமைச்­சர் ஜனில் புதுச்­சேரி கூறி­னார்.

இருப்­பி­னும், தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ள மூத்­தோர் படிப்­ப­டி­யாக முன்­வ­ரு­வ­தாக அவர் கூறி­னார்.

"70 வய­தும் அதற்­கும் மேற்­பட்­டோ­ரில் 79 விழுக்­காட்­டி­னர் குறைந்­தது ஒரு தடுப்­பூ­சி­யே­னும் போட்­டுக்­கொண்­டுள்­ள­னர். நாள்­தோ­றும் கிட்­டத்­தட்ட 1,000 மூத்த குடி­மக்­கள் தடுப்­பூ­சிக்­கான பதிவை மேற்­கொள்­கின்­ற­னர்.

"தடுப்­பூ­சிக்­காக மூத்­தோரை நாடு­வ­தில் மக்­கள் கழ­கம், மூத்த தலை­மு­றை­யி­னர் அலு­வ­ல­கம் ஆகி­ய­வற்­றைச் சேர்ந்த பணி­யாளர்­களும் தொண்­டூ­ழி­யர்­களும் தீவிர முயற்சி எடுத்து வரு­கின்­ற­னர். மூத்­தோர் அதி­க­மாக வசிக்­கும் இடங்­க­ளுக்கு நட­மா­டும் தடுப்­பூ­சிக் குழுக்­கள் அனுப்­பப்­பட்டு வரு­கின்­றன.

"தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வதை ஊக்­கு­விக்­கும் வித­மாக இயன்­ற­வரை அதி­க­மான மூத்­தோரை அணு­கும் முயற்­சி­க­ளைத் தொடர்­வோம்," என்­றார் டாக்­டர் ஜனில்.

தடுப்­பூசி தொடர்­பாக மூத்த குடி­மக்­க­ளி­டையே நில­வும் தயக்­கம் குறித்­தும் தவ­றான தக­வல்­களை முறி­ய­டிப்­ப­தற்­கான முயற்­சி­கள் குறித்­தும் பாட்­டா­ளிக் கட்­சி­யைச் சேர்ந்த அல்­ஜு­னிட் குழுத்­தொகுதி உறுப்­பி­னர் ஜெரல்ட் கியாம் வினா எழுப்­பி­னார். அதற்­குப் பதில் கூறியபோது டாக்­டர் ஜனில் இந்­தப் புள்­ளி­வி­வ­ரங்­களை வெளி­யிட்­டார்.

தடுப்­பூசி தொடர்­பான தவ­றான தக­வல்­க­ளுக்கு எதி­ரா­கச் சுகா­தார அமைச்சு விளக்­கப்­ப­டங்­களை வெளி­யிட்­டுள்­ள­தாக அவர் குறிப்­பிட்­டார். மேலும், இது­போன்ற பிரச்­சி­னை­களை முறி­ய­டிக்க ஒட்டு­மொத்த சமூ­கத்­தின் ஈடு­பாடு தேவைப்­ப­டு­வ­தா­க­வும் அவர் சொன்­னார்.