ஐவர் சேர்ந்து உண்ண அனுமதி

2 mins read

வரும் 10ஆம் தேதி முதல் அதிகபட்சம் ஐவர் ஒன்றுகூடலாம்; வீடுகளில் ஐவரை வரவேற்கலாம்

முழு­மை­யாக கொவிட்-19 தடுப்­பூசி போட்­டி­ருந்­தால், வரும் செவ்­வாய்க்­கி­ழமை 10ஆம் தேதி­யில் இருந்து உண­வ­கங்­களில் அதி­க­பட்­சம் ஐவர் சேர்ந்து உண்ண அனு­ம­திக்­கப்­ப­டு­வர்.

தடுப்­பூசி போட்­டி­ரா­விடினும் நிகழ்ச்­சிக்கு முந்­திய கொரோனா பரி­சோ­த­னை­யில் 'தொற்று இல்லை' எனச் சான்று பெற்­ற­வர்­களும் கிரு­மித்­தொற்­றில் இருந்து மீண்­ட­வர்­களும் அத்­த­கைய ஐவர் குழு­வில் இடம்­பெ­ற­லாம்.

சமூக ஒன்­று­கூ­ட­ல் ஐவர்­வரை இடம்­பெ­ற­லாம். வீடு­களில் அதி­க­பட்­சம் ஐந்து விருந்­தி­னர்­களை வர­வேற்­க­லாம். முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோர், தொற்று அபா­யம் அதி­க­முள்ள பிற நட­வ­டிக்­கை­க­ளி­லும் பெரிய அள­வி­லான நிகழ்ச்­சி­க­ளி­லும் பங்­கேற்க முடி­யும்.

அத்­து­டன், தடுப்­பூசி போட்­டு இ­ருந்­தா­லும் போட்­டி­ரா­வி­டி­னும் அனை­வ­ரும் உண­வங்­காடி நிலை­யங்­க­ளி­லும் காப்­பிக்­க­டை­க­ளி­லும் அமர்ந்து உண்­ண­லாம். ஆயி­னும் அந்த வகை­யில் ஒரு குழு­வில் அதி­க­பட்­சம் இரு­வர் மட்­டுமே இடம்­பெற முடி­யும்.

கொவிட்-19 தொற்­றுக்கு எதி­ரான அமைச்­சு­கள்­நிலை பணிக்­குழு­வின் நேற்­றைய செய்­தி­யா­ளர் சந்­திப்­பின்­போது வர்த்­தக, தொழில் அமைச்­சர் கான் கிம் யோங் இத­னைத் தெரி­வித்­தார்.

தேசிய தின­வாக்­கில் சிங்­கப்­பூர் மக்­கள்­தொ­கை­யில் கிட்­டத்­தட்ட 70 விழுக்­காட்­டி­னர் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டி­ருப்­பர் என எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தால் இந்­தத் தளர்­வு­கள் சாத்­தி­ய­மாகி உள்­ளன என்று சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் சொன்­னார்.

கொரோனா பர­வல் நிலைமை கட்­டுக்­குள் இருந்­தால், ஆகஸ்ட் 19ஆம் தேதி­யில் இருந்து நிகழ்ச்சி­யில் பங்­கேற்­போர் வரம்­பும் கடைத்­தொ­கு­தி­கள், சுற்­று­லாத் தலங்­களில் கொள்­ள­ளவு வரம்­பும் மேலும் அதி­க­ரிக்­கப்­படும். 50% பணி­யா­ளர்­கள் அலு­வ­ல­கங்­க­ளுக்­குத் திரும்­ப­ முடி­யும்.

இந்த ஆயத்­த­நிலை ஏறத்தாழ ஒரு மாதத்­திற்கு, அதா­வது செப்­டம்­பர் தொடக்­கம்வரை நீடிக்­கும் என்­றும் இது, கொவிட்-19 மீட்சி நாடாக உரு­வெ­டுப்­ப­தில் சிங்­கப்­பூ­ரின் நான்கு கட்ட நிலை­மாற்­றத்­தில் முத­லாம் நிலை என்­றும் அமைச்­சர் ஓங் குறிப்­பிட்­டார்.

கட்­டுப்­பா­டு­கள் மேலும் தளர்த்­தப்­பட்டு, அதி­க­மான பொரு­ளி­யல் நட­வ­டிக்­கை­கள் இடம்­பெ­றும்­போது, சமூக நட­வ­டிக்­கை­களும் அதி­க­ள­வில் இடம்­பெ­ற­லாம்; பய­ணங்­களை மீண்­டும் தொடங்­க­வும் வாய்ப்­புள்­ளது. அப்­ப­டிச் செய்­யும்­போது, கிருமி தொற்­று­வ­தும் அத­னால் உயி­ரி­ழப்பு நிகழ்­வ­தும் அதி­க­ரிப்­பதை ஏற்­றுக்­கொள்ள சிங்­கப்­பூ­ரர்­கள் மனத்­த­ள­வில் தயா­ராக இருக்க வேண்­டும் என்று திரு ஓங் கூறி­னார்.

"ஆனா­லும், தீவிர கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­ப­டு­வ­தை­யும் உயி­ரி­ழப்­பை­யும் குறைக்க எங்­க­ளால் ஆன முயற்­சி­களை மேற்­கொள்­வோம். ஆத­லால், முடிந்­த­ளவு அதி­க­மா­னோர்க்கு விரை­வா­கத் தடுப்­பூசி போடு­வ­தும் மிக முக்­கி­யம்," என்­றார் அவர்.

தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­னரா இல்­லையா என்ற அடிப்­ப­டை­யில் தனி­ம­னி­தர்­கள் வேறு­ப­டுத்­தப்­ப­டு­வது தொட­ரப்­படும். வெளி­நா­டு­களில் இருந்து வரு­வோர் கண்­கா­ணிக்­கப்­ப­டு­வது தொட­ரும். கழி­வு­நீர்ப் பரி­சோ­தனை விரி­வு­படுத்­தப்­படும். கால அட்­ட­வ­ணைப்­படி, பொது­மக்­கள் கொரோனா பரி­சோ­தனை மேற்­கொள்­வது வழக்­கப்­படுத்­தப்­படும். இவை­யெல்­லாம், கிரு­மிப் பர­வல் மெது­வ­டை­யச் செய்ய உத­வும்.

இந்நட­வ­டிக்­கை­கள் பல­ன­ளித்­தால், சிங்­கப்­பூர் அடுத்த கட்டத்தில் அடி­யெ­டுத்து வைக்க முடி­யும் என்று பணிக்­குழு­வின் இணைத்­தலை­வ­ரு­மான திரு ஓங் கூறி­னார்.