நம்பிக்கை வாக்கெடுப்பை விரைவில் நடத்த பிரதமர் முகைதீனுக்கு அறிவுறுத்து

நம்பிக்கை வாக்கெடுப்பை விரைவில் நடத்த பிரதமர் முகைதீனுக்கு அறிவுறுத்து

2 mins read
Google News Preferred Icon

நாடா­ளு­மன்­றத்­தில் மலே­சிய பிர­த­மர் முகை­தீன் யாசின், செப்­டம்­பர் மாதத்­தில் நம்­பிக்கை வாக்­கெ­டுப்பு நடத்­து­வ­தாக இருந்­தது. ஆனால், திரு முகை­தீ­னுக்­குத் தொடர்ச்­சி­யாக எதிர்க்­கட்­சி­யி­னர் நெருக்கு­தல் அளித்­து­வ­ரும் நிலை­யில், நம்­பிக்கை வாக்­கெ­டுப்பை விரை­வில் நடத்­து­மாறு மலே­சிய மாமன்­னர் திரு முகை­தீ­னுக்கு அறி­வு­றுத்­தி­யுள்­ளார்.

மாமன்­ன­ரி­டம் 'பெரிக்­கத்­தான் நேஷ­னல்' (பிஎன்) அர­சாங்­கம் கொண்­டி­ருந்த பெரும்­பான்மை இல்­லா­மல் போய்­விட்­டதை எதிர்க்­கட்­சி­யி­னர் நிரூ­பிக்க முயன்­று­வ­ரும் வேளை­யில், நேற்று பிர­த­மர் முகை­தீ­னு­டன் மாமன்­னர் சந்­திப்பு நிகழ்த்­தி­னார். அச்­சந்­திப்­பின்­போது நம்­பிக்கை வாக்­கெ­டுப்பை முன்­ன­தா­கவே நடத்­து­மாறு மாமன்­னர் கூறி­னார்.

மாமன்­ன­ரு­டன் நடந்த சந்­திப்பை அடுத்து, 'பிஎன்' தலை­வர்­க­ளு­டன் அவ­ச­ரக் கூட்­டம் ஒன்­றும் நேற்று நடந்­தது. அதற்­காக பிர­த­மர் அலு­வ­ல­கத்­தில் சந்­தித்­துக்­கொள்ள திரு முகை­தீ­னின் கூட்­ட­ணிக் கட்­சி­யி­னர் நேற்று முன்­தி­னம் முதல் பய­ணிக்­கத் தொடங்­கி­விட்­ட­னர்.

நம்­பிக்கை வாக்­கெ­டுப்பு விரை­வில் நடை­பெ­றப் போகிறது என்ற பர­ப­ரப்பு நிலவ, அடுத்த புதன்­கி­ழ­மை­கூட நடக்­கும் சாத்­தி­யம் உண்டு என்று அர­சாங்க அதி­காரி ஒரு­வர் 'தி ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ்' நாளி­த­ழுக்­குத் தெரி­வித்­த­தாகக் கூறப்­ப­டு­கிறது.

நாடா­ளு­மன்­றத்­தில் பெரும்­பான்மை திரு முகை­தீ­னின் கையை­விட்டு நழுவி­வரு­வ­தைக் கடந்த ஒரு வார­மாக நடந்த நிகழ்­வு­கள் காட்டி வர, நேற்­றைய சந்­திப்­பு­க­ளுக்­கான தேவை­யை­யும் அந்­நிகழ்வு­கள் ஏற்­ப­டுத்­தியுள்ளன.

மலே­சிய நாடா­ளு­மன்­றத்­தில் தற்­போது 220 உறுப்­பி­னர்­கள் உள்­ள­னர். ஆட்­சி­யைக் கைப்­பற்ற குறைந்­தது 111 உறுப்­பி­னர்­கள் தங்­க­ளின் ஆத­ரவை திரு முகை­தீ­னுக்கு அளிக்­க­வேண்­டும்.

முன்­ன­தாக, திரு முகை­தீ­னின் தலை­மையை நிரா­க­ரிப்­ப­தாக எதிர்க்­கட்­சி­யைச் சேர்ந்த 105 எம்­பி­கள் மாமன்­ன­ருக்­குக் கடி­தம் அனுப்­பி­யி­ருந்­த­னர்.

கடந்த செவ்­வாய்க்­கி­ழ­மை­யன்று திரு முகை­தீ­னின் தலை­மைத்­து­வத்­தி­லி­ருந்து அம்னோ எம்­பிக்­கள் 11 பேர் வில­கு­வ­தா­கத் தெரி­வித்­த­போ­தி­லும், தமக்கே நாடா­ளு­மன்­றத்­தில் பெரும்­பான்மை உள்­ளது என்று சுல்­தான் அப்­துல்­லா­வி­டம் திரு முகை­தீன் கூறி­னார்.

அத­னால் நம்­பிக்கை வாக்­கெ­டுப்பை அடுத்த மாதம் நடத்­தித் தம் பெரும்­பான்­மையை நிரூ­பித்­திட மாமன்­னர் தம் ஒப்பு­தலை அளித்­தார். இருப்­பி­னும், நாடா­ளு­மன்­றப் பெரும்­பான்­மையை இழந்­து­விட்ட நிலை­யில் பதவி வில­கு­வது குறித்து திரு முகை­தீ­னி­டம் பேச அழைத்­தி­ருந்த மாமன்­னரை பிர­த­மர் முகை­தீன் திசை திருப்பி­விட்­ட­தாக அர­சி­யல் விமர்­ச­கர்­கள் சாடு­கின்­ற­னர்.

நாடா­ளு­மன்­றம் கலைக்­கப்­ப­டு­வற்­கான பேச்­சும் இதற்­கி­டையே எழுந்­துள்­ளது. அவ்­வாறு கலைக்­கப்­பட்­டால் 60 நாட்­களுக்­குள் தேர்­தல் நடத்த வேண்­டி­யிருக்­கும். இந்­நி­லை­யில், எம்­பிக்­க­ளின் பெரும்­பான்மை ஆத­ரவு திரு முகை­தீ­னுக்கு இல்லை என்ற பிர­க­ட­னங்­களை சுல்­தான் அப்­துல்லா ஏற்­றுக்­கொண்­டால், இன்­னும் ஈராண்­டில் நடை­பெ­ற­வுள்ள அடுத்த தேர்­தல்­வரை பிர­த­மர் முகை­தீ­னுக்­குப் பதி­லாக வேறொ­ரு­வரை மாமன்­னர் பிர­த­ம­ராக நிய­மிக்­க­லாம்.