கொரோனாவால் கேரள மக்கள் அவதி

கொரோனாவால் கேரள மக்கள் அவதி

1 mins read

இந்­தி­யா­வின் கேரள மாநி­லத்­தில் கடந்த 24 மணி நேரத்தில் 23,500 பேர் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

அவர்­களில் இரண்­டா­வது முறை­யாக கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களும் முழு­மை­யாக தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­களும் அடங்­கு­வர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

கேர­ளா­வில் புதிய வகை கொவிட்-19 கிருமி பரவி வரும் சாத்­தி­யத்தை நிரா­க­ரிக்க முடி­யாது என்று அம்­மா­நி­லத்­தின் சுகா­தார அமைச்­சு கவலை தெரி­வித்­துள்­ளது.

இந்­நி­லை­யில், மலை­யா­ளி­

க­ளின் முக்­கிய பண்­டி­கை­யான ஓணம் நெருங்­கு­கிறது (இம்­மா­தம் 21ஆம் தேதி).

நிலை­மை­யைக் கருத்­தில் கொண்டு ஓணம் உள்­ளிட்ட

பண்­டி­கை­க­ளைப் பொது இடங்­களில் கொண்­டா­டவோ பெரு­ம­ள­வில் கூடவோ கேரள அரசு தடை விதித்­துள்­ளது.

புதிய பாதிப்பு அதி­க­மாக உள்ள இடங்­களில் பரி­சோ­தனை அதி­க­ரிக்­கப்­படும். சப­ரி­மலை ஐயப்­பன் கோவில் யாத்­திரை நாளை மறு­நாள் தொடங்­கு­கிறது. கூட்ட நெரி­சலைத் தவிர்க்க, ஒவ்­வொரு நாளும் 15,000 பேர் மட்­டுமே அனு­ம­திக்­கப்­ப­டு­வார்­கள்.

இன்­னும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­வர்­கள் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள இய­லா­த­வர்­கள் அத்தி­யா­வ­சிய பொருட்­களை வாங்க வெளியே செல்­ல­லாம் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மதுக்­க­டை­க­ளுக்குச் செல்­

ப­வர்­க­ளுக்­கும் தடுப்­பூசி உள்­ளிட்ட நிபந்­த­னை­கள் கட்­டா­ய­மாக்­கப்­பட்­டுள்­ளன.

முதல்­முறை தடுப்­பூசி போட்­ட­வர்­கள், கிரு­மித்­தொற்று இல்லை என்று பரி­சோ­த­னை­யில் உறுதி செய்­யப்­பட்­ட­வர்­கள். கிரு­மித்­தொற்று ஏற்­பட்டு அதி­லி­ருந்து குண­ம­டைந்து ஒரு மாதத்­துக்கு மேலா­ன­வர்­கள் மட்­டுமே மதுபானம் வாங்க கடைக்குச் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 நெருக்கடிநிலை மேலும் மோசமடையாமல் இருக்க இந்த கடுமையான கட்டுப்பாடுகள் அவசியம் என்று கேரள அரசு வலியுறுத்தியது.