தடுப்பூசிக்கு முந்தும் அவசரத்தில் சமூக இடைவெளியை மறந்த மக்கள் கூட்டம்

தடுப்பூசிக்கு முந்தும் அவசரத்தில் சமூக இடைவெளியை மறந்த மக்கள் கூட்டம்

1 mins read
1bee7b49-a4d4-40be-8327-2e906cbae299
வரிசையில் காத்துக்கொண்டிருந்தவர்களிடையே பாதுகாப்பான தூர இடைவெளி இல்லாதது குறித்து பலர் அதிருப்திக் குரல் எழுப்பினர். படம்: லே மரியேம் இயக்குநர் இன்ஸ்டகிராம் -

மலே­சி­யத் தலை­ந­கர் கோலா­லம்­

பூ­ரில் உள்ள கிராண்ட் சீசன்ஸ் ஹோட்­ட­லில் அமைக்­கப்­பட்­டுள்ள தடுப்­பூசி நிலை­யத்­தில் மக்­கள் நீண்ட வரி­சை­யில் காத்­தி­ருந்­த­னர்.

வரி­சை­யில் நின்­று­கொண்­டி­ருந்த அனை­வ­ரும் அரு­க­ரு­கில் நின்று கொண்­டி­ருந்­த­தைக் காட்­டும் காணொளி நேற்று முன்­தி­னம் இணை­யத்­தில் வலம் வந்­தது.

சமூக இடை­வெளி விதி­முறை கடைப்­பி­டிக்­கப்­ப­டா­தது குறித்து காணொ­ளி­யைப் பார்த்த பலர்

அதி­ருப்தி தெரி­வித்­த­னர்.

மலே­சி­யா­வில் கொவிட்-19

கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­ப­டு­வோ­ரின் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரும் நிலை­யில், இது நிகழ்ந்­தி­ருப்­பது ஏமாற்­றம் அளிப்­ப­தாக மலே­சி­யர்­கள் பலர் கூறி­னர். தடுப்­பூசி நிலை­யத்­துக்கு வெளியே ஆட­வர் ஒரு­வர் தமது மோட்­டார் சைக்­கிளை நிறுத்தி சமூக இடை­

வெ­ளி­யைக் கடைப்­பி­டிக்­கும்­படி அனை­வ­ரி­டமும் கத்­து­வ­தைக் காணொளி காட்­டு­கிறது.

கொவிட்-19 விதி­மு­றை­கள் பின்­பற்­றப்­ப­டு­வதை அமைச்­சர்­களும் அதி­கா­ரி­களும் உறுதி செய்ய வேண்­டும் என்று அவர் கண்­ணீர் மல்க மன்­றா­டும் காட்சி பார்ப்­ப­வர் மனதை உருக வைத்­தது.