உலகநாடுகளிடம் உதவி கேட்ட ஆப்கன் அதிபர்

உலகநாடுகளிடம் உதவி கேட்ட ஆப்கன் அதிபர்

2 mins read
18b5c5ec-4054-4a88-ae93-e4e25b72df6e
சமன் எனும் ஊரில் ஆப்கானிஸ்தானுடனான பாகிஸ்தான் எல்லைப்பகுதி மூடப்பட்டதால் அங்கு தப்பிச் செல்ல முயன்ற ஆப்கானியர்கள் நேற்று நாடு திரும்பினர். படம்: ஏஎப்பி -

தலி­பான் படை­கள் ஆப்கானிஸ்தான் தலை­ந­கர் காபூலை நெருங்­கி­வ­ரும் வேளை­யில் நாட்டில் கூடு­தல் அழி­வைத் தடுப்­ப­தற்­காக உள்­நாட்டு, வெளி­நாட்­டுத் தலை­வர்­க­ளு­டன் பேச்சு நடத்தி வரு­வ­தாக ஆப்கன் அதி­பர் அஷ்­ரஃப் கனி கூறி­யுள்­ளார்.

ஆப்­கன் படை திரட்­டப்­படும் என்று கூறிய அவர், மேல்­வி­வ­ரம் அளிக்­க­வில்லை. தொலைக்­காட்சி மூலம் நாட்டு மக்­க­ளுக்கு ஆற்­றிய உரை­யில் அவர் அத­னைத் தெரி­வித்­தார். திரு அஷ்­ரஃப் பதவி விலக வேண்­டும் என்று தலி­பான் வற்­பு­றுத்­தி­யி­ருந்­தது. ஆனால் ஆப்­கான் அதி­பர் அது பற்­றி நேற்­றைய உரை­யில் ஏதும் குறிப்­பி­ட­வில்லை.

பெரும்­பான்­மை­யான நேட்டோ துருப்­பு­கள் ஏற்­கெ­னவே ஆப்­கா­னிஸ்­தானை விட்டு வெளி­யேறி விட்­டன. அமெ­ரிக்கா, பிரிட்­டன் போன்ற நாடு­கள் அவற்­றின் தூத­ரக ஊழி­யர்­களை வெளி­யேற்­றத் தயா­ராகி வரு­கின்­றன. இன்று மாலைக்­குள் சுமார் 3,000 அமெ­ரிக்­கத் துருப்­பி­னர் காபூ­லைச் சென்­ற­டை­வர் என்று அமெ­ரிக்­கத் தற்­காப்பு அமைச்சு பேச்­சா­ளர் ஜான் கெர்பி நேற்று கூறி­னார்.

அதே வேளை­யில் காபூ­லைத் தற்­காக்க அமெ­ரிக்­கா­வும் வேறு சில மேற்­கத்­திய நாடு­களும் அவற்­றின் படை­களை அனுப்­பப் போவ­தா­கக் கூறி­யுள்­ளன. அமெ­ரிக்கா குவைத்­தில் நிறுத்­தப்­பட்­டுள்ள அதன் தரைப்­ப­டை­யி­னரை அனுப்­பும் என்று தெரி­வித்­தது.

இந்­நி­லை­யில் தலி­பான் படை­யி­னர் காபூ­லுக்கு சுமார் 70 கிலோ­மீட்­டர் தொலை­வில் உள்ள புல்-இ-அலாம் எனும் நக­ரத்தை நேற்று தங்­கள் கட்­டுப்­பாட்­டுக்­குள் கொண்டு வந்­த­னர். லோகர் மாநி­லத்­தின் தலை­ந­க­ர­மான அந்நக­ருக்­குள் நுழைந்த தலி­பான் படை­யி­ன­ரை ஆப்­கானிஸ்தான் படை­கள் பெரிதும் எதிர்க்­க­வில்லை என்று உள்­ளூர் அதி­காரி ஒரு­வர் ஏஎப்பி நிறு­வ­னத்­தி­டம் தெரி­வித்­தார்.

தலி­பான் படை­கள் ஆப்­கா­னிஸ்­தா­னின் கண்­ட­கார், ஹீரத் நக­ரங்­களை நேற்று முன்­தி­னம் தங்­கள் கட்­டுப்­பாட்­டுக்­குள் கொண்டு வந்­த­ன. நாட்­டின் மாநி­லத் தலை­ந­க­ரங்­களில் கிட்­டத்­தட்ட பாதி அவர்­கள் வசம் உள்­ளது.

இவ்­வாண்டு மட்டும் அங்கு சுமார் 400,000 மக்கள் தங்­கள் வீடு­களை விட்டு வெறி­யே­றி­யுள்­ள­தாக ஐக்­கிய நாட்டு அக­தி­கள் அமைப்பு கூறி­யது.

அவர்­களில் கிட்­டத்­தட்ட 120,000 பேர் காபூ­லில் தஞ்­சம் புகுந்­துள்­ள­னர். பல்­லா­யி­ரம் அக­தி­களை ஏற்­றுக்­கொள்­ளும்­படி அமெ­ரிக்கா உல­க­நா­டு­க­ளைக் கேட்­டு­வ­ரு­கிறது. கனடா 20,000 அக­தி­களை ஏற்க முன்­வந்­துள்­ளது.