மலேசியப் பிரதமர் பதவி விலகல்; மாமன்னர் ஏற்பு

மலேசியப் பிரதமர் பதவி விலகல்; மாமன்னர் ஏற்பு

3 mins read
9d9d2d8b-b34f-43dc-b442-6d859b8e1677
பதவி விலகியபின் நேற்றுப் பிற்பகல் 3 மணிக்குத் தொலைக்காட்சி வழியாக நாட்டு மக்களிடம் உரை ஆற்றினார் பிரதமர் முகைதீன். படம்: ஆர்டிஎம்/ஃபேஸ்புக் -

புதிய அரசாங்கம் பொறுப்பேற்கும்வரை முகைதீன் பிரதமராகத் தொடர்வார்

மலே­சி­யப் பிர­த­மர் பத­வி­யில் இருந்து திரு முகை­தீன் யாசின் நேற்று வில­கி­னார். அவ­ரது பதவி வில­கலை மாமன்­னர் ஏற்­றுக்­கொண்­டார்.

ஆயி­னும், புதிய பிர­த­மர் நிய­மிக்­கப்­ப­டும்­வரை திரு முகை­தீன் இடைக்­கா­லப் பிர­த­ம­ரா­கக் கட­மை­ ஆற்­று­வார்.

நாட்டு மக்­க­ளின் நல­னை­யும் பாது­காப்­பை­யும் கருதி, இப்­போ­தைய சூழ­லில் பொதுத் தேர்­தலை நடத்­து­வது சிறப்­பான தெரி­வாக இராது என்று மாமன்­னர் அறிக்கை வெளி­யிட்­டுள்­ளார்.

நேற்று முற்­ப­க­லில் அரண்­ம­னைக்­குச் சென்று, மாமன்­ன­ரைச் சந்­தித்த திரு முகை­தீன், அவ­ரி­டம் தமது பதவி வில­கல் கடி­தத்தை அளித்­தார்.

அதன்­பின் பிற்­ப­க­லில் தொலைக்­காட்சி வழி­யாக நாட்டு மக்­க­ளி­டம் உரை­யாற்­றிய திரு முகை­தீன், "நிர்­வா­கத்­திற்கு இடை­யூறு ஏற்­ப­டா­வண்­ணம், புதிய அர­சாங்­கம் விரை­வில் நிய­மிக்­கப்­படும் என்று நம்­பு­கி­றேன். பொது­மக்­கள் கவ­லைப்­பட வேண்டாம். அனை­வர்க்­கும் தடுப்­பூசி போடும் வகை­யில், போது­மான அள­விற்­கும் மேல் தடுப்­பூ­சி­களை வாங்க எனது தலை­மை­யி­லான அர­சு நட­வடிக்கை எடுத்­துள்­ளது. தடுப்­பூ­சித் திட்­டம் செவ்­வனே நடந்தால், அக்­டோ­பர் மாத இறு­திக்­குள் எல்­லார்க்­கும் தடுப்­பூசி போடப்­பட்­டு­வி­டும்," என்று கூறி­னார்.

நாடா­ளு­மன்­றத்­தில் பெரும்­பான்­மையை இழந்­து­விட்­டதை ஒத்­துக்­கொண்ட அவர், "நாட்டு வளங்­க­ளைச் சுரண்­டி­ய­வர்­க­ளு­டன் இணைந்து நான் சதி­ செய்­யப்­போ­வதோ அல்­லது நீதித்­து­றை­யில் குறுக்­கி­டவோ அல்­லது பத­வி­யில் நீடிப்­ப­தற்­காக அர­சி­ய­ல­மைப்­பிற்கு விரோ­த­மா­கச் செயல்­ப­டப்­போவதோ இல்லை," என்றார்.

கொவிட்-19 நெருக்கடியிலிருந்து மலே­சியா விரை­வில் மீளும் என்­றும் திரு முகை­தீன் நம்­பிக்­கை தெரி­வித்­துள்­ளார்.

முன்­ன­தாக, நேற்­றுக் காலை அமைச்­ச­ர­வைக் கூட்­டத்­திற்­குப் பிறகு, மலே­சிய அமைச்­ச­ரவை மாமன்­ன­ரி­டம் பத­வி வில­கல் கடி­தத்தை அளித்து­ விட்­ட­தாக அறி­வி­யல், தொழில்­நுட்ப, புத்­தாக்க அமைச்­சர் கைரி ஜமா­லு­தீன் தம்முடைய இன்ஸ்­ட­கி­ராம் பக்­கம் வழி­யா­கத் தெரி­வித்தார்.

இம்­மா­தம் 3ஆம் தேதி அம்னோ எம்.பி.க்கள் 11 பேர், திரு முகை­தீன் தலை­மை­யி­லான அர­சாங்­கத்­திற்கு அளித்து வந்த ஆத­ரவை விலக்­கிக்­கொள்­வ­தாக அறி­வித்­த­னர். அத­னைத் தொடர்ந்து, தமது பத­வி­யைத் தக்­க­வைத்­துக்­கொள்ள திரு முகை­தீன் கடந்த இரு வாரங்­க­ளாக பல்­வேறு முயற்­சி­களை மேற்­கொண்­ட­தா­கக் கூறப்­பட்­டது. ஆனா­லும், அவை தோல்வி அடைந்­த­தால் அவர் தலை­மை­யி­லான 18 மாத கால ஆட்சி நேற்­று­டன் முடி­விற்கு வந்­தது.

இத­னை­ய­டுத்து, அடுத்த பிர­த­ம­ராக நிய­மிக்­கப்­ப­ட­லாம் என்று ஒரு­சி­ல­ரது பெயர்­கள் அடி­படும் நிலை­யில், மொத்­தம் 222 உறுப்­பி­னர்­க­ளைக் கொண்ட மலே­சிய நாடா­ளு­மன்­றத்­தில் பெரும்­பான்மை ஆத­ர­வைப் பெற்­றுள்­ள­வர் யார் என்­பதை மாமன்­னர் முடி­வு­செய்­வார்.

இப்­போ­தைக்கு இரு எம்.பி. இடங்­கள் காலி­யாக இருக்­கும் நிலை­யில், மற்ற 220 பேரில் 100 பேர் திரு முகை­தீன் தலை­மை­யி­லான பெரிக்­கத்­தான் முன்­ன­ணிக்கு ஆத­ர­வாக இருப்­ப­தா­கச் சொல்­லப்­ப­டு­கிறது. எதிர்க்­கட்­சித் தலை­வர் அன்­வார் இப்­ரா­ஹிம் தலை­மை­யி­லான பக்­கத்­தான் ஹரப்­பான் கூட்­ட­ணி­யில் 88 பேர் உள்­ள­னர்.

அம்னோ தலை­வர் அக­மது ஸாஹிட் ஹமி­டிக்கு ஆத­ர­வாக 15 பேரும் மற்­றப் பல கட்­சி­க­ளைச் சேர்ந்த 17 எம்.பி.க்கள் முன்­னாள் பிர­த­மர் மகா­தீர் முகம்­ம­துக்கு ஆத­ர­வா­க­வும் இருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இஸ்மாயிலுக்கு மஇகா ஆதரவு

இத­னி­டையே, அம்னோ துணைத் தலை­வர் இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப் தமது தலை­மை­யில் புதிய அர­சாங்­கம் அமைய பெரிக்­கத்­தான் முன்­னணி எம்.பி.க்க­ளி­டம் ஆத­ரவு திரட்­டும் முயற்­சி­யில் ஈடுபட்டுள்ளதாகத் தக­வல்­ வெளி­யா­கி­யுள்­ளது.

அதற்­குக் கைம்­மா­றாக, தம்­வ­சம் இருந்த துணைப் பிர­த­மர் பொறுப்பை அவர் பெர்­சத்து கட்­சிக்கு வழங்கக்­கூ­டும் என்­றும் பேச்சு அடி­ப­டு­கிறது. ஸாஹிட் தரப்­பை­யும் அவர் சரிக்­கட்ட முடிந்­தால், 115 எம்.பி.க்களின் ஆத­ர­வு­டன் அவர் ஆட்­சி­யில் அம­ர­லாம்.

இந்­நி­லை­யில், அம்னோ தலை­மை­யி­லான தேசிய முன்­ன­ணி­யில் இடம்­பெற்­றுள்ள மலே­சிய இந்­தி­யர் காங்­கி­ரஸ் கட்­சி­யின் தலை­வர் எஸ் ஏ விக்­னேஸ்­வ­ரன், திரு இஸ்­மா­யி­லுக்­குப் பல­ரது ஆதரவு இருப்பதால் புதிய பிரதமராக அவருக்கு ஆத­ரவு அளிக்கும்படி திரு ஸாஹிட்டைக் கேட்டுக்கொண்டுள்ளதாக மலே­சி­யா­கினி செய்தி கூறு­கிறது.