மலேசியாவின் அடுத்த பிரதமர்: முடிவெடுக்கும் வேளை வந்துவிட்டது

மலேசியாவின் அடுத்த பிரதமர்: முடிவெடுக்கும் வேளை வந்துவிட்டது

2 mins read
74dc30f4-9527-4a69-a888-f522eac40917
மலேசிய எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் மாமன்னரைச் சந்தித்தபின், செய்தியாளர்களிடம் பேசினார். படம்: ராய்ட்டர்ஸ் -

மலே­சி­யா­வின் அடுத்த பிர­த­மர் யார் என்ற தங்­க­ளின் தெரி­வு­களை 220 எம்.பி.க்களும் இன்று மாலை நான்கு மணிக்­குள் தமக்­குத் தெரி­யப்­ப­டுத்த வேண்­டும் என்று மாமன்­னர் கெடு வைத்­துள்­ளார். கிட்­டத்­தட்ட 18 மாதங்­க­ளுக்­குப் பிறகு மீண்­டும் அர­சி­யல் களத்­தில் ஏற்­பட்­டுள்ள முடக்­க­நி­லை­யைத் தீர்ப்­ப­தற்­காக மாமன்­னர் தலை­யிட்­டு உள்ளார்.

பிர­த­மர் பத­வி­யி­லி­ருந்து விலகு­வ­தாக நேற்று முன்­தி­னம் முகை­தீன் யாசின் அறி­வித்­ததை அடுத்து, மாமன்­னர் நேற்று பிர­தான கட்­சி­க­ளின் தலை­வர்­களை ஒன்­றா­கச் சந்­தித்­துப் பேசி­னார். நேற்று நடந்த சந்­திப்­பில் அம்னோ, பெஜு­வாங் தானா ஆயர் கட்சி, பார்ட்டி இஸ்­லாம் செம­லே­சியா கட்சி மற்­றும் பக்­கத்­தான் ஹரப்­பா­னின் மூன்று தனிக்­கட்­சி­களும் கலந்­து­கொண்­டன.

இதை­ய­டுத்து, எதிர்க்­கட்­சித் தலை­வர் அன்­வார் இப்­ரா­ஹிம் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­னார்.

"அர­சி­யல் அமைப்­பு­முறை மாற­வேண்­டும் என்­றார் மாமன்­னர். தோல்­வி­யைத் தழு­வு­வோரை வெற்றி பெறு­ப­வர் இனி ஒடுக்­கக்­கூ­டாது என்­பதே இதன் பொருள்.

"அனைத்­துக் கட்­சி­க­ளின் பலத்­தை­யும் ஒன்று திரட்­ட­வேண்­டும் என்ற புரிந்­து­ணர்வு புதி­தாக ஏற்­ப­ட­வேண்­டும். கொவிட்-19 சிக்­கல், பொரு­ளி­யல் மீட்சி இரண்­டை­யும் எதிர்­கொள்­ளும் வகை­யில் ஒத்­துழைப்பு இருக்க வேண்­டும்.

"அனை­வ­ரும் தங்­க­ளின் கருத்து­க­ளைக் கூறி­னர். பழைய முறை­யில், சலிப்­புத் தட்­டும் வகை­யில் அர­சி­யல் நடத்­து­வது இனி வேண்­டாம் என்ற ஒரு­மித்த கருத்­தைத் தெரி­வித்­த­னர்," என்­றார்.

பிர­தான கட்­சி­களை ஒரே சம­யத்­தில் சந்­தித்­துப் பேசி­ய­தன் மூலம், அர­சி­யல்­வா­தி­கள் தங்­க­ளின் கருத்து வேறு­பா­டு­களை ஒரு­பு­றம் வைத்­து­விட்டு ஒன்­றி­ணைந்த அர­சாங்­கத்­திற்­கான சம­ரச வேட்­பா­ளர் ஒரு­வரை முன் நிறுத்­தச் செய்­வதே மாமன்­ன­ரின் நோக்­கம் என்று அர­சி­யல் கவ­னிப்­பா­ளர்­கள் தெரி­வித்துள்­ள­னர்.

இன்று மாலை நான்கு மணிக்­குள் மலே­சி­யா­வின் 220 எம்.பி.க்களும் தங்­க­ளின் முடிவு குறித்து மாமன்­ன­ருக்­குத் தெரி­விக்க வேண்­டும் என்று நாடா­ளு­மன்ற நாய­கர் அஸார் ஹருன் கடி­தம்­வழி தெரி­வித்­தி­ருந்­தார்.

நாடா­ளு­மன்­றத்­தில் தெளி­வான பெரும்­பான்­மை­யைக் கொண்ட தலை­வர் யாரும் இல்­லாத நிலை­யில் புதிய அர­சாங்­கத்தை அமைக்­கும் சவால்­மிக்க பொறுப்பு மாமன்­ன­ரின் வசம் வந்­துள்­ளது.

பெரும்­பான்மை இல்­லா­வி­டில் அவ­ச­ர­நிலை அறி­விப்பு

தங்­க­ளுக்­குப் பெரும்­பான்மை ஆத­ரவு உள்­ள­தாக எந்த ஓர் உறுப்­பி­ன­ராலும் காட்ட முடி­யாத நிலை­யில், மலே­சிய மாமன்­னர் அவ­ச­ர­நிலை அறி­விப்­பார்.

அத்­து­டன் தேசிய செயல்­பாட்டு மன்­றம் என்ற ஒன்­றை­யும் அவர் அமைப்­பார் என்று தெரி­விக்­கப்­பட்டுள்­ளது.

புதி­தாக அமைக்­கப்­படும் இந்த மன்­றம், 15வது பொதுத் தேர்­தல் நடக்­கும்­வரை தற்­கா­லி­க­மாக நாட்டு நிர்­வா­கம் சுமு­க­மாக நடை­பெ­று­வதை உறு­தி­செய்­யும் என்று கூறப்­பட்­டது.

மாமன்­ன­ரின் ஒப்­பு­த­லு­டன் நிய­மிக்­கப்­படும் மன்­றத் தலை­வர், நாட்டு நிர்­வா­கத்தை மேற்­பார்­வை­ இ­டு­வார்.

திரு முகை­தீ­னின் உருக்­க­மான காணொ­ளிப் பதிவு

இதற்­கி­டையே, தற்­போது மலே­சி­யா­வின் இடைக்­கா­லப் பிர­த­ம­ராக உள்ள திரு முகை­தீன், பிர­த­ம­ராகத் தமது 18 மாதப் பய­ணம் தொடர்­பில் உருக்­க­மான காணொ­ளிப் பதிவு ஒன்­றைச் சமூக வலைத்­தளங்­களில் வெளி­யிட்­டுள்­ளார். 'மலே­சி­யர்­க­ளுக்கு நன்றி' என்பதே அக்­கா­ணொ­ளி­யின் தலைப்பு.

இந்­நி­லை­யில் 2023ஆம் ஆண்­டில் நடை­பெ­ற­வுள்ள அடுத்த பொதுத் தேர்­த­லில் தமது தலை­மை­யில் பெர்­சத்து போட்­டி­யி­டும் என்று திரு முகை­தீன் குறிப்­பிட்டுள்­ளார்.