கனமழை காரணமாக பாசிர் ரிஸ் டிரைவ் 12க்கும் தெம்பனிஸ் அவென்யூ 10க்கும் இடையிலான சாலைச் சந்திப்பில் நேற்று காலை திடீர் வெள்ளம் ஏற்பட்டது.
இடுப்பளவு வரை வெள்ளம் உயர்ந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதைச் சிறிதும் எதிர்பார்க்காமல் அவ்வழியாகச் சென்றுகொண்டிருந்த கிட்டத்தட்ட 13 வாகனங்கள் வெள்ளத்தில் சிக்கின. சம்பவ இடத்துக்கு விரைந்த குடிமைத் தற்காப்புப் படையினர் வாகனங்களிலிருந்து வெளியே வர முடியாமல் மாட்டிக்கொண்ட ஐவரை மீட்டனர்.
ஒருவருக்குக் காலில் வலி ஏற்பட்டதாகவும் அவர் சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.