புதிய மலேசியப் பிரதமருக்கு வாழ்த்து கூறிய பிரதமர் லீ

புதிய மலேசியப் பிரதமருக்கு வாழ்த்து கூறிய பிரதமர் லீ

2 mins read

மலே­சி­யா­வின் ஒன்­ப­தா­வது பிர­த­ம­ராக நேற்று பத­வி­யேற்ற திரு

இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப்­புக்கு பிர­த­மர் லீ சியன் லூங் தமது வாழ்த்­து­க­ளைத் தெரி­வித்­துக்­கொண்­டார். திரு இஸ்­மா­யி­லு­டன் நேற்று தொலை­பேசி மூலம் தொடர்புகொண்டு பேசிய திரு லீ,

அவ­ருக்கு வாழ்த்து கூறும் கடி­தம் ஒன்­றை­யும் அனுப்­பி­வைத்­துள்­ளார்.

சிங்­கப்­பூ­ருக்­கும் மலே­சி­யா­வுக்­கும் இடை­யி­லான நீண்­ட­கால

நல்­லு­றவை இரு­நா­டு­க­ளின் தலை­வர்­களும் மறுஉறுதி செய்­துள்­ள­னர்.

இரு­நா­டு­களும் எதிர்­நோக்கும் கொவிட்-19 நெருக்­க­டி­நிலை போன்ற சவால்­களை முறி­ய­டிக்க ஒன்­றி­ணைந்து செயல்­ப­டு­வது குறித்து கலந்­து­ரை­யா­டப்­பட்­ட­தாக வெளி­யு­றவு அமைச்சு தெரி­வித்­தது. திரு இஸ்­மா­யி­லின் தலை­மை­யின்­கீழ் மலே­சி­யா­வுக்­கும் சிங்­கப்­பூ­ருக்­கும் இடை­யி­லான உறவு தொடர்ந்து செழிப்­பாக, நட்­பு­ணர்வு நிறைந்து இருக்­கும் எனத் தாம் மிகுந்த நம்­பிக்கை கொண்­டி­ருப்­ப­தாக பிர­தமர் லீ தமது கடி­தத்­தில் குறிப்­பிட்­டார்.

"இரு நாடு­க­ளுக்­கும் பொது­வான ஆர்­வங்­களும் இலக்­கு­களும் உள்­ளன. இரு­நாட்டு மக்­கள்

பல­ருக்கு ரத்த பந்தமும் உள்­ளது.

"இரு­நா­டு­களும் எதிர்­நோக்­கும் பொது­வான சவால்­களை ஒன்­றி­ணைந்து முறி­ய­டிக்க இது­வரை ஆட்­சி­யில் இருந்­துள்ள மலே­சிய அர­சாங்­கங்­க­ளு­டன் சிங்­கப்­பூர் மிக அணுக்­க­மா­கச் செயல்­பட்டு

வந்­துள்­ளது," என்று திரு லீ தமது கடி­தத்­தில் குறிப்­பிட்­டார்.

பொதுச் சேவை­யி­லும் அர­சாங்­கத்­தி­லும் திரு இஸ்­மா­யி­லுக்கு நிறைய அனு­ப­வம் இருப்­ப­தாக திரு லீ கூறி­னார். அவர் பல அமைச்சு களுக்­குத் தலை­மை­தாங்­கி­ய­வர் என்­றும் அத­னைத் தொடர்ந்து, முந்­தைய அர­சாங்­கங்­க­ளின் துணைப் பிர­த­ம­ரா­க­வும் மூத்த அமைச்­ச­ரா­க­வும் பதவி வகித்­த­வர் என்­றும் திரு லீ கூறி­னார்.

"உங்­கள் தலை­மை­யின்­கீழ் மலே­சியா தொடர்ந்து வெற்­றி­நடை போட்டு செல்வ செழிப்­பு­டன் இருக்­கும் என்­ப­தில் எனக்கு நம்­பிக்கை உள்­ளது. இரு­நாட்டு ஒத்­து­ழைப்­பைப் பலப்­ப­டுத்த நீங்­கள் பெரி­தும் பங்­காற்றி இருக்­கி­றீர்­கள்," என்று திரு லீ தமது கடி­தத்­தில் எழு­தி­யி­ருந்­தார். இரு­நா­டு­களும் பலன் அடைய வேண்­டும் என்ற இலக்­கு­டன், திரு இஸ்­மா­யி­லைக் கூடிய விரை­வில் சந்­தித்து, இரு­நாடு

களுக்­கும் இடை­யி­லான ஒத்

து­ழைப்பை விரி­வு­ப­டுத்த விரும்­பு­வ­தாக திரு லீ கூறி­னார்.

சிங்­கப்­பூ­ருக்கு அதி­கா­ர­பூர்­வப் பய­ணம் மேற்­கொள்­ளும்­படி திரு இஸ்­மா­யி­லுக்­குப் பிர­த­மர் லீ அழைப்பு விடுத்­துள்­ளார்.