பாதிப்படைந்தோர் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள்

2 mins read

உட்­லண்ட்ஸ் வட்­டா­ரத்­தில் உள்ள நார்த் கோஸ்ட் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் விடு­தி­யில் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்ட 62 பேரும் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­கள் என்று மனி­த­வள அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

வழக்­க­மாக நடத்­தப்­படும் கொவிட்-19 பரி­சோ­தனை மூலம் மூன்று பேருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டி­ருப்­பது முத­லில் தெரி­ய­வந்­தது. அதே சம­யத்­தில் விடுதி யிலி­ருந்து வெளி­யான கழி­வு­நீ­ரைச் சோதித்­துப் பார்த்­த­போ­தும் அங்கு தங்­கு­ப­வர்­க­ளுக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டி­ருப்­பது வெளிச்­சத்­துக்கு வந்­தாக அமைச்சு கூறி­யது. அதை­ய­டுத்து அங்கு தங்கு

பவர்­க­ளுக்­குப் பரி­சோ­தனை நடத்­தப்­பட்­டது.

அதன்­மூ­லம் மேலும் 59

பேருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டி­ருப்­பது உறுதி செய்­யப்­பட்­டது.

பாதிக்­கப்­பட்ட 62 பேரும் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­கள் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அவர்­களில் சில­ருக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக்­கான அறி­கு­றி­கள் இல்லை என்று அமைச்சு கூறி­யது.

எஞ்­சி­யி­ருப்­ப­வர்­க­ளுக்கு இலே­சான சுவா­சத் தொற்­றுக்­கான அறி­கு­றி­கள் இருந்­த­தாக அறி­யப்

படு­கிறது. பாதிக்­கப்­பட்­டோர் அனை­வ­ரும் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு நிலை­யங்­க­ளுக்கு அனுப்­பப்­பட்­டுள்­ள­தா­க­வும் அங்கு அவர்­க­ளுக்­குச் சிகிச்சை அளிக்­கப்­ப­டு­வ­தா­க­வும் அமைச்சு தெரி­வித்­தது.

நோய்­வாய்ப்­பட்­டுள்ள 62

பேரு­டன் நெருங்­கிய தொடர்­பில் இருந்­த­வர்­களும் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்

பட்­டது. அத்­து­டன், பாதிக்­கப்­பட்ட ஊழி­யர்­கள் பணி­பு­ரிந்த கட்­டு­

மா­னத் தளங்­களில் கட்­டட, கட்­டு­மான ஆணை­யம் வேலை நிறுத்த உத்­த­ர­வைப் பிறப்­பித்­துள்­ளது.

முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக நார்த் கோஸ்ட் விடு­தி­யில் தங்­கும் அனைத்து ஊழி­யர்

களுக்­கும் அடுத்த சில வாரங்­

க­ளுக்கு அடிக்­கடி கொவிட்-19

பரி­சோ­தனை நடத்­தப்­படும்.

இது­வரை 2,200 ஊழி­யர்

களுக்கு கொவிட்-19 பரி­சோ­தனை நடத்தப்பட்டதா­க­வும் மேலும் 3,200 ஊழி­யர்­க­ளுக்­கான பரி­சோ­தனை நடத்­தப்­பட்டு வரு­வ­தா­க­வும்

சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

கிரு­மிப் பர­வ­லைத் தடுக்க விடு­தி­யில் உள்ள அனை­வ­ருக்கு நட­மாட்­டக் கட்­டுப்­பாடு உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. அதன்­படி, ஊழி­யர்­கள் தங்­கள் அறை­யி­லேயே 14 நாட்­க­ளுக்கு இருக்க வேண்­டும். அது­மட்­டு­மல்­லாது, அறை­யில் இருக்­கும்­போது அவர்­கள் சமூக இடை­வெளி விதி­மு­றை­யைக் கடைப்­பி­டிக்க வேண்­டும்.

விடு­தி­யில் தங்­கும் ஊழி­யர்

களுக்கு எவ்­வாறு கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டது என்­பதை கண்­ட­றிய விசா­ரணை நடத்­தப்­ப­டு­கிறது.

நேற்று 111 பேருக்குத் தொற்று

சிங்­கப்­பூ­ரில் நேற்­றைய நில­வ­ரப்­படி மேலும் 111 பேருக்­குச் சமூக அள­வில் பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளது.

அவர்­களில் 33 பேருக்­கு ஏற்­கெ­னவே பாதிக்­கப்­பட்­டோ­ருடன் தொடர்­பில்லை. எஞ்­சி­யுள்ள 78 பேர் ஏற்­கெ­னவே பாதிக்­கப்­பட்­டோ­ரு­டன் தொடர்­பில் இருந்­த­வர்­கள் என சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது. இவர்­களில் 24 பேர் நார்த் கோஸ்ட் விடுதி குழு­மத்­து­டன் தொடர்­பு­டை­ய­வர்­கள்.

தனி­மைப்­ப­டுத்­தப்­பட்ட 24 பேருக்­குப் பரி­சோ­தனை செய்­த­போது அவர்­க­ளுக்­குக் கிரு­மித்­தொற்று இருப்­பது தெரி­ய­வந்­தது.