தடுப்பூசி போடும் விகிதத்தை இந்தியா உடனடியாக அதிகரிக்காவிட்டால் ஒவ்வொரு நாளும் புதிதாக 600,000 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக அந்நாட்டின் தேசிய பேரிடர் நிர்வாக அமைப்பு நடத்திய ஆய்வு தெரிவித்துள்ளது.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் கொவிட்-19 பாதிப்பு மோசமான நிலையை எட்டக்கூடும் என்றும் மேலும் பலர் உயிரிழக்கக்கூடும் என்றும் அது கூறியது.
இந்தியாவில் வரும் அக்டோபர் மாதத்தில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மளமளவென அதிகரித்து மூன்றாவது கொவிட்-19 அலை ஏற்படும் ஆபத்து இருப்பதாக அமைப்பு முன்னுரைத்துள்ளது.
ஆனால், இந்திய அரசாங்கம் நாளுக்கு 10 மில்லியன் பேருக்குத் தடுப்பூசி போடும் திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் அன்றாடப் பாதிப்பு 200,000ஆகக் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கொவிட்-19 அலையின்போது ஏற்பட்ட மிக மோசமான பாதிப்பைத் தவிர்க்க மருத்துவ
மனைகளில் போதுமான படுக்கைகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று எளிதில் பாதிப்
படையக்கூடியவர்களுக்குத் தடுப்பூசி போட வேண்டும் என்றும் அமைப்பு வலியுறுத்தியது. கடந்த மே மாதத்தில் இந்தியாவில் கொவிட்-19 பாதிப்பு உச்சத்தைத் தொட்டு 250,000க்கும் மேற்பட்டோர்
உயிரிழந்தனர்.

