அடைமழையால் நீரில் மூழ்கிய சாலைகள்

அடைமழையால் நீரில் மூழ்கிய சாலைகள்

1 mins read
9423a77b-6604-4b82-a51e-2244aac1abf1
டன்னர்ன் சாலையில் உள்ள கால்வாயில் நீர் நிரம்பியதை அடுத்து, அப்பகுதியில் வெள்ளம் ஏற்பட்டது. படம்: லீடியா லீ -

விடாது பெய்த மழை­யால் நேற்று காலை திடீர் வெள்­ளம் ஏற்­பட்­டது. டன்­னர்ன் சாலை, புக்­கிட் தீமா சாலை­யில் உள்ள கால்­வா­யில்

நீர்­மட்­டம் மிக வேக­மாக உயர்ந்து சாலை­க­ளுக்­குள் நீர் வழிந்­தோ­டி­யது.

அதன் விளை­வாக சைம் டார்பி நிலை­யத்­துக்­கும் பிஞ்­சாய் பார்க்­கிற்­கும் இடைப்­பட்ட டன்­னர்ன் சாலை வெள்­ளத்­தில் மூழ்­கி­யது.

அப்­ப­கு­தி­யில் வாக­னங்­கள் செல்ல முடி­யாத நிலை ஏற்­பட்டு போக்­கு­வ­ரத்து முடங்­கி­யது. டன்­னர்ன் சாலை­ வழியாகச் சென்ற பேருந்­துச் சேவை­கள் பாதிக்­கப்­பட்­டன. அப்­பர் புக்­கிட் தீமா சாலை, உட்­லண்ட்ஸ் சாலைக்­கும் கிராஞ்சி விரை­வுச்­சா­லைக்­கும் இடை

யிலான சாலைச் சந்­திப்பு, சன்­செட் டிரைவ், சன்­செட் வே ஆகிய இடங்­க­ளி­லும் திடீர் வெள்­ளம் ஏற்­படும் அபா­யம் இருப்­ப­தா­க­வும் அவ்­வி­டத்­தைப் பொது­மக்­கள் தவிர்க்க வேண்­டும் என்­றும் பொதுப் பய­னீட்­டுக் கழ­கம் தனது ஃபேஸ்புக் பக்­கத்­தில் நேற்று எச்­ச­ரிக்கை விடுத்­தது.

கன­மழை கார­ண­மாக அந்த இடங்­களில் உள்ள சாக்­க­டை­

க­ளி­லும் கால்­வாய்­க­ளி­லும் நீரின் அளவு 90 விழுக்­காடு நிரம்­பி­விட்­ட­தாக அது தெரி­வித்­தது.