3,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பலனடைவர் பயணத்துறை, வாழ்க்கைமுறைக்கான சேவைத் துறையினருக்கு மின்னிலக்கத் திறன்

2 mins read

பய­ணத்­துறை, வாழ்க்­கை­மு­றைக்­கான சேவைத் துறை ஆகி­ய­வற்­றைச் சேர்ந்த நிறு­வ­னங்­கள், கொள்­ளை­நோய் சூழ­லில் பெரி­தும் பாதிப்­ப­டைந்­துள்­ளன. நெருக்­க­டி­யி­லி­ருந்து அவை மீண்டு­வ­ரு­வ­தற்­குப் பல்­வேறு வாழ்க்­கைத்­தொ­ழில் மாற்­றத் திட்­டங்­கள், கடந்த ஆண்டு ஜன­வரி மாதம் முதல் தொடங்­கப்­பட்டு வரு­கின்­றன.

இத்­திட்­டங்­கள்­வழி மின்­னி­லக்க, தொழில்­நு­ணுக்­கத் திறன்­களை ஊழி­யர்­கள் பெறு­வ­து­டன் புதிய வாய்ப்­பு­க­ளை­யும் அமைத்­துக்­கொள்­ள­லாம் என்று மனி­த­வள அமைச்­சும் சிங்­கப்­பூர் ஊழி­யர் அணி அமைப்­பும் நேற்று தெரி­வித்­தன. இது­போன்ற திட்­டங்­கள் மூலம் 2019ல் இணைந்­தோர் 40 நிறு­வனங்­க­ளைச் சேர்ந்த 110 ஊழி­யர்­கள் ஆவர்.

ஆனால் கடந்த ஆண்டு ஜன­வரி முதல் இவ்­வாண்டு ஆகஸ்ட் வரை, 200க்கும் மேற்­பட்ட நிறு­வனங்­க­ளைச் சேர்ந்த 3,100க்கும் அதி­க­மான ஊழி­யர்­கள் இத்­திட்­டங்­களின்கீழ் இணைந்­துள்­ள­னர்.

தற்­போது பய­ணத்­துறை, வாழ்க்கை­மு­றைக்­கான சேவைத் துறை ஆகிய இரண்­டுக்­கும் 23 திட்­டங்­கள் தொடங்­கப்­பட்டு உள்­ளன. இந்­நி­லை­யில், இம்­மா­தம் தொடங்கி அடுத்த ஆண்டு டிசம்­பர் வரை இத்­திட்­டங்­கள் மூலம் மேலும் 1,400 பேர் பல­ன­டை­வர் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

கொவிட்-19 கொள்­ளை­நோயால் இவ்­விரு துறை­களில் உள்ள நிறு­வனங்­கள் அவற்­றின் மின்­னி­லக்­க­ம­ய­மா­கும் திட்­டங்­களைத் துரி­தப்­ப­டுத்த வேண்­டிய கட்­டா­யம் ஏற்­பட்­டு­விட்­ட­தா­கக் கூறப்­பட்­டது.

சந்­திப்­பு­கள், நிகழ்­வு­களை மெய்­நி­க­ராக நடத்­து­வது, எல்­லைக் கட்­டுப்­பா­டு­க­ளுக்கு இடையே வெவ்­வேறு நாடு­க­ளைச் சுற்­றிப்­பார்க்க விரும்­பு­வோ­ருக்­காக மெய்­நி­கர் சுற்­று­லாக்­க­ளுக்கு ஏற்­பாடு செய்­வது, சுற்­று­லாத் தளங்­களில் நேரடித் தொடர்பு இல்­லாத வண்­ணம் சேவை வழங்­கு­வது போன்ற வழி­களில் தொழில்­நுட்­பத்­தைக் கையாள்­வதை இத்­து­றை­க­ளைச் சேர்ந்­தோர் அறி­வர்.

இத்­த­கைய உரு­மாற்­றத் திட்­டங்­க­ளுக்­காக நிறு­வ­னங்­கள் தங்­களின் வேலை­களையும் பொறுப்­பு­களையும் மறு­வ­டி­வ­மைக்க வேண்­டி­ இ­ருந்­தது என்­றார் மனி­த­வள அமைச்­சர் டான் சீ லெங்.

சிங்­கப்­பூர் விலங்­கி­யல் தோட்­டத்­திற்கு நேற்று சென்­றி­ருந்த அவர், 24வது வேலை­ நில­வர அறிக்கை தொடர்­பில் இத­னைத் தெரி­வித்­தார்.

இணைய வர்த்­த­கம், தரவுப் பகுப்­பாய்வு, மின்­னி­லக்க விற்­பனை மற்­றும் விளம்­ப­ரம் ஆகிய அம்­சங்­கள் தொடர்­பி­லான திறன்­கள், பழைய ஊழி­யர்­க­ளுக்­கும் புதி­தாகச் சேரும் ஊழி­யர்­க­ளுக்­கும் தேவைப்­படு­வ­தாக மனி­த­வள அமைச்­சும் சிங்­கப்­பூர் ஊழி­யர் அணி அமைப்­பும் தெரி­வித்­தன.