'வேட்டையாடுவோம்'

'வேட்டையாடுவோம்'

2 mins read
58939bea-423d-448f-be5a-5769e93bdd49
வியாழக்கிழமை பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த உறவினரைப் பார்த்து ஒரு மாது கதறி அழுகிறார். படங்கள்: ஏஎஃப்பி -
multi-img1 of 2

காபூல் பயங்கரவாதிகளை ஒழிக்க அமெரிக்க அதிபர் சூளுரை

காபூ­லில் நடத்­தப்­பட்ட தற்கொலைத்­தாக்­கு­த­லில் 13 அெமரிக்க வீரர்­கள் உட்­பட 85 பேர் கொல்­லப்­பட்­ட­தால் கவலையும் கோப­மும் அடைந்த அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன், பழிக்­குப் பழி வாங்­கப்­படும் என்று சூளு­ரைத்­துள்­ளார்.

பயங்கரவாதத் தாக்குத­லுக்குக் கார­ண­மா­ன­வர்­களைத் தேடி வேட்­டை­யா­டு­வோம் என்­றும் அவர் கூறி­யுள்­ளார்.

காபூல் விமான நிலை­யத்­துக்கு அருகே இரட்டை குண்­டு­வெ­டிப்­பு நடந்த அடுத்த சில மணி நேரங்­களில் வெள்ளை மாளிகையில் அவர் செய்­தி­யா­ளர்­களைச் சந்­தித்­தார். அப்­போது அவ­ரது முகம் சிவந்­தி­ருந்­தது, கோபம் கொப்­ப­ளித்­தது, நா தழு­த­ழுத்­தது. எப்­ப­டி­யும் அவர்­களைப் பழி­வாங்க வேண்­டும் என்ற உறுதி தென்­பட்­டது.

"அமெ­ரிக்­கா­வுக்­குத் தீங்­கி­ழைப்­ப­வர்­க­ளுக்கு என்ன நடக்­கும் என்­பது எல்லா­ருக்­கும் தெரி­யும். நாங்­கள் மறக்­க­வும் மாட்­டோம், மன்னிக்க­வும் மாட்­டோம்," என்று திரு பைடன் சொன்­னார்.

2001 செப்­டம்­பர் 11 பயங்­க­ர­வாதத் தாக்­கு­த­லுக்­குப் பிறகு பேசிய அப்­போ­தைய அதி­பர் ஜார்ஜ் டபிள்யூ புஷ், மறக்க மாட்­டோம், நாங்­கள் உங்­களை வேட்­டை­யா­டு­வோம், அதற்­கான விலை­யைக் கொடுத்தே ஆக வேண்­டும் என்று கூறி­யி­ருந்­தார். அதி­பர் பைட­னின் பேச்­சும் அதைப்­போ­லவே எச்­ச­ரித்­தது.

சிரி­யா­வி­லும் ஈராக்­கி­லும் அமெ­ரிக்­கா­வு­டன் போரிட்ட ஐஎஸ்­ஐ­எஸ்-கே என்ற பயங்­க­ர­வாத அமைப்பு தாக்­கு­த­லுக்­குப் பொறுப்பு ஏற்­றுள்­ளது. அமெ­ரிக்க ராணு­வத்­துக்கு ஒத்­து­ழைத்­த­வர்­க­ளை­யும் மொழி­ பெ­யர்ப்­பா­ளர்­க­ளை­யும் இரு தற்­கொ­லை­யா­ளி­களில் ஒரு­வர் குறி வைத்­த­தாக அந்த அமைப்பு கூறி­யது.

இந்­நி­லை­யில் ஆப்­கா­னிஸ்­தா­னி­லி­ருந்து அக­தி­க­ளை­யும் வெளி ­நாட்­ட­வர்­க­ளை­யும் வெளி­யேற்­றும் பணி தொட­ரும் என்று அதி­பர் பைடன் உறு­தி­ய­ளித்­துள்­ளார்.

"பயங்­க­ர­வா­தி­க­ளால் எங்­க­ளு­டை­யப் பணியை தடுத்து நிறுத்த முடி­யாது. வெளி­யேற்­றும் பணி தொட­ரும்," என்­றார் அவர்.

தலி­பான் படை­யைச் சேர்ந்த 28 உறுப்­பி­னர்­கள் உட்­பட இறந்தவர் களின் எண்ணிக்கை 72க்கு அதி கரித்துள்ளதாக தலிபான் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்தத் தாக்குதலில் குறைந்தது 150 பேர் காயம் அடைந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

இதில் உயி­ரி­ழந்த அமெ­ரிக்க படையினரை, மற்­ற­வர்­க­ளின் உயிர்­க­ளைக் காப்­பாற்­றும் தன்­ன­ல­மற்ற பணி­யில் ஈடு­பட்ட மாவீரர்கள் என்று அதி­பர் பைடன் புக­ழா­ரம் சூட்­டி­யுள்­ளார்.

ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படையினருக்கு கூடுதல் படைகள் தேவைப்பட்டால் உடனடியாக அனுப்பி வைக்கவும் அெமரிக்கா தயாராக உள்ளது.