புதிய ஆறு ரயில் நிலையங்கள் இன்று திறக்கப்படுகின்றன

புதிய ஆறு ரயில் நிலையங்கள் இன்று திறக்கப்படுகின்றன

2 mins read
20ec2d77-2f6e-4a0d-8c6b-be800e8542cb
மேஃபிளவர் எம்ஆர்டி நிலையத்தில் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன், தேசிய பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் டியோ சீ ஹியன். நேற்றைய திறப்பு விழாவில் முன்னாள் போக்கு வரத்து அமைச்சர் கோ பூன் வான், நிலப் போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் ஆலன் சான், எஸ்எம்ஆர்டியின் சியா மூன் மிங் ஆகியோரும் கலந்து கொண்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தாம்­சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதை­யில் அமைந்­துள்ள புதிய ஆறு ரயில் நிலை­யங்­கள் இன்று பொது­மக்­க­ளுக்­குத் திறக்­கப்­ப­டு­கின்றன.

ஸ்பி­ரிங்­லீஃப், லெண்­டோர், மேஃபிள­வர், பிரைட் ஹில், அப்­பர் தாம்­சன், கால்­டி­கோட் ஆகிய ஆறு நிலை­யங்­கள் 2வது கட்ட தாம்­சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதை­யில் அமைந்­துள்­ளன.

இப்­பா­தை­யில் உள்ள ரயில்­கள் உச்ச நேரத்­தில் ஐந்து நிமிட இடை­வெ­ளி­யி­லும் மற்ற நேரங்­களில் ஒன்­பது நிமிட இடை­வெளி யிலும் சேவை­யாற்­றும்.

பய­ணி­க­ளின் எண்­ணிக்­கை­யைப் பொறுத்து ரயில்­க­ளின் நேரம் மறு­ப­ரி­சீ­ல­னை செய்­யப்­படும் என்று நிலப்­ போக்­கு­வ­ரத்து ஆணை­யம் நேற்று தெரி­வித்­தது.

சிங்­கப்­பூ­ரின் மற்ற பாதை­களில் உள்ள ரயில்­கள் காலை 7 மணி­யி­லி­ருந்து 9 மணி வரை­யி­லான உச்­ச­நே­ரத்­தில் இரண்டு முதல் மூன்று நிமி­டத்­திற்கு ஒரு முறை சேவை­யாற்­று­கின்­றன. இதுவே உச்­ச­நே­ர­மில்­லாத சம­யங்­களில் ஐந்து முதல் ஏழு நிமிட இடை­வெ­ளி­யில் ரயில்­கள் செயல்­ப­டு­கின்­றன.

புதிய 2வது கட்ட தாம்­சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதை­யில் இரண்டு சந்­திப்­பு­கள் இடம்­பெற்று உள்­ளன.

கால்­டி­கோட் ரயில் நிலை­யம், வட்­டப் பாதை­யு­டன் இணைக்­கப் பட்­டுள்­ளது. பிரைட் ஹில் ரயில் நிலை­யம், எதிர்­கால குறுக்­குத் தீவு ரயில் பாதை­யு­டன் இணைக்­கப்­படும்.

நேற்­றுக் காலை 2வது கட்ட தாம்­சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதை­யின் அதி­கா­ர­பூர்­வத் திறப்பு விழா­வில் போக்­கு­வ­ரத்து அமைச்­சர் எஸ். ஈஸ்­வ­ரன் கலந்து கொண்­டார்.

அப்­போது, ரயில் கட்­டு­மா­னப் பணி­க­ளால் ஏற்­பட்ட அசெ­ள­க­ரி­யங்­களைப் பொறுத்­துக்­கொண்ட குடி­மக்­க­ளுக்­கும் கடைக்­கா­ரர் களுக்­கும் அவர் நன்றி தெரி­வித்­துக் கொண்­டார்.

புதிய ரயில் பாதை­யால் பொதுப்­போக்­கு­வ­ரத்து மீதான ஒட்­டு­மொத்த நம்­ப­கத்­தன்மை மேலும் அதி­க­ரிக்­கும் என்று கூறிய அமைச்சர், பொதுப்போக்கு வரத்­தின் மேம்­பட்ட வச­தி­யால் சிங்­கப்­பூ­ரர்­கள் பலனடை­வார்கள் ­என்றார்.

இதே நிகழ்ச்­சி­யில் சிறப்பு விருந்­தி­ன­ரா­கப் பங்­கேற்ற மூத்த அமைச்­ச­ரும் தேசிய பாது­காப்பு ஒருங்­கி­ணைப்பு அமைச்­ச­ரு­மான டியோ சீ ஹியன், நிலை­யங்­ களுக்கு அரு­கில் அைமந்­துள்ள உண­வகங்­களை சுட்­டிக்­காட்டி இப்­பாதை 'உணவுத் தாழ்­வா­ரம்'ஆகத் திக­ழும் என்­றார்.

தாம்­சன்-ஈஸ்ட் கோஸ்ட் 2வது கட்ட ரயில் பாதையின் கட்­டு­மா­னப் பணி­கள் கடந்த ஆண்டின் 2ஆம் பாதி­யில் பூர்த்­தி­யா­கும் என எதிர்­பார்க்­கப்­பட்­டது. ஆனால் கொள்­ளை­நோய் கார­ண­மாக கால­தா­ம­த­மா­னது.

முதல் கட்ட, 2வது கட்ட ரயில் பாதை­ மட்­டும் சுமார் 100,000 குடும்­பங்­களுக்கு பயனளிக்கும் என்று அமைச்­சர் ஈஸ்­வ­ரன் சொன்­னார்.