தீவு முழுவதும் 1,300 புதிய வாடகை வீடுகள்

தீவு முழுவதும் 1,300 புதிய வாடகை வீடுகள்

2 mins read

சொந்த வீடுகளும் இருக்கும் ஒருங்கிணைந்த குடியிருப்புகளாகக் கட்டப்படுகின்றன

வாடகை வீடு­களும் சொந்த வீடு­களும் கலந்து இருக்­கக்­கூ­டிய ஒருங்­கி­ணைந்த பல வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கக் குடி­யி­ருப்­பு­கள் கட்­டப்­பட்டு வரு­வ­தாக தேசிய வளர்ச்சி துணை அமைச்­சர் முகம்­மது ஃபைஷல் இப்­ரா­ஹிம் தெரி­வித்­துள்­ளார்.

சிங்­கப்­பூ­ரில் இப்­போது ஏறக்­கு­றைய 1,300 பொது வாடகை வீடு­கள் கட்­டப்­பட்டு வரு­வ­தா­க­வும் அப்­பணி­கள் 2025ஆம் ஆண்­டிற்­குள் படிப்­ப­டி­யாக முடி­வ­டை­யும் என்­றும் இணைப் பேரா­சி­ரி­யர் ஃபைஷல், ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­த­ழுக்கு அளித்த சிறப்பு நேர்­கா­ண­லின்­போது கூறி­னார்.

அவ்­வீ­டு­களில் சில, காலாங்/வாம்போ, பாசிர் ரிஸ், செங்­காங் ஆகிய வட்­டா­ரங்­களில் மேற்­கொள்­ளப்­பட்டு வரும் தேவைக்­கேற்ப கட்­டித் தரப்­படும் மூன்று வீவக திட்­டங்­களில் நான்கு ஒருங்­கி­ணைந்த குடி­யி­ருப்­பு­களில் அமை­யும் என்று அவர் குறிப்­பிட்­டார்.

இப்­போது புக்­கிட் பாத்­தோக்­கி­லும் உட்­லண்ட்­சி­லும் அத்­த­கைய ஒருங்­கி­ணைந்த இரு குடி­யி­ருப்பு­கள் உள்­ளன.

2020 நில­வ­ரப்­படி, ஏறத்­தாழ 62,000 வாடகை வீடு­கள் உள்­ளன. அவை அனைத்­தி­லும் குடி­ இருக்­கா­வி­டி­னும், பொது வாடகை வீடு­க­ளைத் தொடர்ந்து அதி­க­ரிப்­ப­தற்­கான தேவை இருப்­ப­தாக பேரா­சி­ரி­யர் ஃபைஷல் கூறி­னார்.

"வாடகை வீடு­க­ளைக் கட்­டு­வதை அதி­கப்­ப­டுத்தி வரு­கி­றோம். அதற்கு, வாடகை வீடு­களும் சொந்த வீடு­களும் கலந்து இருக்­கும் ஒருங்­கி­ணைந்த வீவக குடி­யி­ருப்­பு­களை அமைக்­கும் முறை­யைக் கையாண்டு வரு­கிறோம்," என்­றார் அவர்.

இது சவா­லானது என்றாலும், அனை­வ­ரையும் உள்­ள­டக்­கிய தன்­மையை மேம்­ப­டுத்த இந்த வாய்ப்­பினை நாம் பயன்­படுத்­திக்­கொள்ள வேண்­டும் என்­றும் அவர் சொன்­னார்.

கட்­டுப்­ப­டி­யா­தல், அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கு­தல், எளி­தில் வாங்க முடி­தல் ஆகிய மூன்­றை­யும் சிங்­கப்­பூ­ரின் பொது வீட­மைப்­புக் கொள்­கை­யின் சிறப்­பம்­சங்­களாக பேரா­சி­ரி­யர் ஃபைஷல் குறிப்­பிட்­டார்.

அத­னால்­தான், கிரேட்­டர் சௌதர்ன் வாட்­டர்­ஃபி­ரன்ட் போன்ற முக்­கி­யப் பகு­தி­களில் வாடகை வீடு­க­ளைக் கட்­டும் திட்­டங்­களை அர­சாங்­கம் அறி­வித்து இருப்­ப­தாக அவர் சுட்­டி­னார்.

"அங்கு அமை­யும் வச­தி­கள் பல்வேறு தரப்பினரின் வெவ்­வேறு தேவை­க­ளைப் பூர்த்தி செய்­யும் வகையில் இருப்­பதை உறு­திப்­படுத்­து­வோம்," என்­றார் துணை அமைச்­சர் ஃபைஷல்.

இருப்­பி­னும், தங்­க­ளது வாழ்க்­கைத்­தொ­ழில், குடும்பம், நிதித் திட்­ட­மி­டல் சார்ந்த பிரச்­சி­னை­களைச் சரிசெய்ய கூடு­தல் காலம் தேவைப்­படும் குடும்­பங்­க­ளுக்­கான தற்­கா­லி­கக் குடி­யி­ருப்­பு­க­ளாக வாடகை வீடு­கள் விளங்க வேண்­டும் என்று அவர் வலி­யு­றுத்­தி­னார்.

எதார்த்­த­மான, நீடித்து நிலைக்­கத்­தக்க வழி­யில், முடிந்த அள­விற்­குப் பல குடும்­பங்­களை வாடகை வீட்­டில் இருந்து சொந்த வீட்­டிற்கு மாற ஆத­ரவு அளிப்­பதே குறிக்­கோள் என்று திரு ஃபைஷல் குறிப்­பிட்­டார்.

கடந்த ஐந்­தாண்­டு­களில் பல்­வேறு வீட­மைப்­புத் திட்­டங்­கள், மானி­யங்­கள் மூல­மாக கிட்­டத்­தட்ட 4,600 குடும்­பங்­கள் வாடகை வீட்­டில் இருந்து சொந்­த­மாக வீவக வீடு வாங்­கிச் சென்­ற­தாக அவர் தெரி­வித்­தார்.