கொவிட்-19 தொற்று: இந்தியாவில் இரு மாதங்களில் இல்லாத உச்சம்

கொவிட்-19 தொற்று: இந்தியாவில் இரு மாதங்களில் இல்லாத உச்சம்

1 mins read

இந்­தி­யா­வில் கிட்­டத்­தட்ட இரு மாதங்­களில் இல்­லாத அள­வாக, கடந்த 24 மணி நேரத்­தில் புதி­தாக 46,759 பேர்க்கு கொவிட்-19 தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது; 509 பேர் உயி­ரி­ழந்­த­னர்.

இதை­ய­டுத்து, மொத்த பாதிப்பு கிட்­டத்­தட்ட 32.7 மில்­லி­ய­னா­க­வும் உயி­ரி­ழப்பு 437,370ஆக­வும் உயர்ந்­தது.

ஆக அதி­க­மாக, கேரள மாநிலத்­தில் மேலும் 32,801 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். இத­னால், கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த அங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊர­டங்கு அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பண்­டி­கைக் காலம் தொடங்­க­வுள்ள நிலை­யில், பெரிய அள­விலான ஒன்­று­கூ­டல்­கள் இடம்­பெறா­மல் பார்த்­துக்­கொள்­ளும்­படி எல்லா மாநி­லங்­க­ளையும் மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது.

பத்து மில்லியன் பேர்க்குத் தடுப்பூசி

இதனிடையே, இந்தியாவில் நேற்று முன்தினம் ஒரே நாளில் பத்து மில்லியன் பேர்க்குமேல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

இதுகுறித்து டுவிட்டரில் கருத்துரைத்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, "ஒரே நாளில் ஒரு கோடி பேர்க்குமேல் தடுப்பூசி போட்டது குறிப்பிடத்தக்க சாதனை," என்று மெச்சினார்.

ஒட்டுமொத்தத்தில், இந்­தி­யா­வில் இது­வரை 628 மில்­லி­யன் தடுப்­பூ­சி­கள் போடப்­பட்­டுள்­ளன. 18 வய­தைத் தாண்­டி­ய­வர்­களில் பாதிக்­கும் மேற்­பட்­டோர் குறைந்­தது ஒரு தடுப்­பூ­சி­யே­னும் போட்­டுக்­கொண்­டுள்­ள­னர். இவ்­வாண்டு இறு­திக்­குள் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவர்க்கும் தடுப்பூசி போட இந்திய அரசாங்கம் இலக்கு கொண்டுள்ளது.