சிங்கப்பூரில் உள்ளூர் அளவில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 10) 568 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானது. சுகாதார அமைச்சு வெளியிட்ட தினசரி அறிவிப்பில் இந்தத் தகவலை வெளியிட்டது.
உள்ளூரில் கிருமி தொற்றியவர்களில் 127 பேர் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்தோர்.
வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூர் வந்த ஐந்து பேருக்கும் தொற்று உறுதியானது.
இந்நிலையில், கொவிட்-19 தொற்றால் ஏற்பட்ட உடல்நலப் பிரச்சினை காரணமாக 80 வயது ஆடவர் ஒருவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். அவர் ஒருமுறை தடுப்பூசி போட்டுக்கொண்டவர். அவரையும் சேர்த்து சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 58 ஆக உள்ளது.
சென்ற வாரம் வெள்ளிக்கிழமை தினசரி தொற்று 219 ஆக இருந்தது. ஆனால், அதனுடன் ஒப்புநோக்க தற்போதைய தொற்று எண்ணிக்கை இருமடங்கிற்கு மேல் கூடியுள்ளது.