தடுப்பூசி போடாதோருக்கு மரண ஆபத்து அதிகம் என்கிறது ஆய்வு

தடுப்பூசி போடாதோருக்கு மரண ஆபத்து அதிகம் என்கிறது ஆய்வு

2 mins read

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ரான தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­வர்­கள் மர­ண­ம­டை­யும் சாத்­தி­யம் 11 விழுக்­காடு அதி­கம் என்று அமெ­ரிக்க சுகா­தார அதி­கா­ரி­கள் நடத்­திய ஆய்வு ஒன்று தெரி­வித்­துள்­ளது. அமெ­ரிக்க அர­சாங்க ஊழி­யர்­கள் கட்­டா­யம் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள வேண்­டும் என்று அதி­பர் ஜோ பைடன் தெரி­வித்­த­தற்கு மறு­நாள் சில ஆய்வு முடி­வு­கள் வெளி­யி­டப்­பட்­டன. தடுப்­பூ­சி­யின் ஆற்­ற­லை­யும் தொற்­று­கள், மருத்­து­வ­மனை அனு­மதி, மர­ணம் போன்­ற­வற்­றுக்கு எதி­ராக அது செயல்­படும் விதத்தையும் அந்த ஆய்­வு­கள் விளக்கி உள்­ளன.

அவற்­றில் ஒன்று 13 மாநி­லங்­களில் மேற்­கொள்­ளப்­பட்­டது. அமெ­ரிக்­கா­வின் மொத்த மக்­கள்­தொ­கை­யில் சுமார் கால்­வா­சிப் பேர் வசிக்­கும் இம்மாநி­லங்­களில் 600,000க்கும் மேற்­பட்­டோர் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்டு உள்­ள­னர். இவ்­வாண்டு ஏப்­ரல் முதல் ஜூலை வரை­ மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்வு, ஒரு தடுப்­பூ­சி­கூட போட்­டுக்­கொள்­ளா­தோ­ருக்கு ஆபத்து அதி­கம் என்­ப­தைச் சுட்­டி­யுள்­ளது.

அவர்­கள் எளி­தில் கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­கும் சாத்­தி­ய­மும் மர­ண­ ம­டை­யும் சாத்­தி­ய­மும் அதி­கம் என்­று குறிப்­பி­டும் அந்த ஆய்வு அதற்­கான வாய்ப்­பு­கள் எந்த அள­வுக்கு இருக்­கும் என்றும் தெரி­வித்­துள்­ளது.

முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­களைவிட ஒரு தடுப்­பூ­சிை­யும் போடா­த­வர் நோய்த்­தொற்­றுக்கு ஆளா­கும் சாத்­தி­யம் 4½ மடங்கு அதி­கம்; மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­படும் சாத்­தி­யம் 10 மடங்கு அதி­கம்; மர­ண­ம­டை­யும் சாத்­தி­யம் 11 மடங்கு அதி­கம் என்­கிறது ஆய்வு.

எனவே, தற்போது அதிக வீரியத் துடன் பரவும் டெல்டா கிருமி வகை யையும் தடுப்பூசியால் தடுக்க இயலும் என்று ஆய்வு குறிப்பிடு கிறது. இருப்பினும் கிருமி தொற்று வதைத் தடுக்கும் தடுப்பூசியின் ஆற்றல் 91 விழுக்காட்டிலிருந்து 78 விழுக்காட்டுக்குக் குறைந்திருப்பதாக அது கண்டறிந்துள்ளது.