முதியோர் விடுதிகளுக்குச் செல்ல தடை

முதியோர் விடுதிகளுக்குச் செல்ல தடை

3 mins read

முதி­யோர் பரா­ம­ரிப்பு விடு­தி­க­ளுக்­குச் செல்ல இன்று முதல் ஒரு மாத காலம் அனைவருக்கும் தடை விதிக்­கப்­ப­டு­கிறது.

அத்தகைய விடு­தி­களில் கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லைத் தடுப்­ப­தற்கு மேலும் ஒரு நட­வடிக்கை­யாக இந்­தத் தடை நடப்புக்கு வரு­வதாக சுகா­தார அமைச்சு நேற்று அறி­வித்­தது.

நோயுற்ற முதி­யோர் தங்கி பரா­ம­ரிப்பு சிகிச்சை பெறு­கின்ற விடு­தி­களில் இருப்­போர், ஊழி­யர்­கள், வாடிக்­கை­யா­ளர்­கள் ஆகி­யோ­ரி­டையே கொவிட்-19 தொற்று அண்­மை­யில் அதி­க­ரித்து இருக்­கிறது. அத­னை­ய­டுத்து இந்­தத் தடை நடப்­புக்கு வரு­கிறது.

இன்­ன­மும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­மல் இருக்­கும் முதி­ய­வர்­களைத் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளும்­படி ஊக்­க­மூட்­ட­வும் அத்­த­கைய விடு­தி­களில் இருப்­போ­ருக்கு பூஸ்­டர் தடுப்­பூசி செயல்­திட்­டத்தை நடப்­புக்­குக் கொண்டு ­வ­ர­வும் அக்­டோ­பர் 11ஆம் தேதி வரைப்­பட்ட இந்­தத் தடை உத­வும் என்று அமைச்சு தெரி­வித்­தது.

முதி­யோர் பரா­ம­ரிப்பு விடு­தி­களின் ஊழி­யர்­க­ளுக்­கும் குடி­யிருப்­பா­ளர்­க­ளுக்­கும் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்­கும் பரி­சோ­த­னை­ பலப்­ப­டுத்­தப்­படும்.

விரை­வுப் பரி­சோ­தனை அடிக்கடி நடத்­தப்­படும். தட­ம­றி­யும் சோத­னை­க­ளுக்கு இவை உறு­துணை­யாக இருக்­கும் என்று அமைச்சு குறிப்­பிட்­டது.

சிங்­கப்­பூ­ரில் கடந்த இரண்டு வாரங்­களில் 18 முதி­யோர் பரா­மரிப்பு விடு­தி­களில் அல்­லது அந்தச் சேவை வழங்­குவோரில் 42 பேருக்குத் தொற்று ஏற்­பட்டு உள்ளதாக அமைச்சு அறிக்கை ஒன்­றில் கூறி­யது. வரும் வாரங்­களில் தொற்று எண்­ணிக்கை தொடர்ந்து அதி­க­ரிக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இந்­தச் சூழ­லில் எளி­தில் பாதிக்­கக்­கூ­டிய முதி­யோரைப் பாது­காக்க மேலும் நட­வ­டிக்­கைகள் எடுக்க வேண்­டிய தேவை இருக்­கிறது என்று குறிப்­பிட்ட அமைச்சு, வரும் வாரங்­களில் சூழ்­நி­லையை அணுக்­க­மா­கக் கண்­கா­ணித்து அதற்­கேற்ப இந்­தத் தடை மறு­பரி­சீ­லனை செய்­யப்­படும் என்­றது.

இத­னி­டையே, 60 மற்­றும் அதற்கு அதிக வய­துள்ள முதி­ய­வர்­கள், முதி­யோர் பரா­ம­ரிப்பு நிலை­யங்­க­ளைச் சேர்ந்­த­வர்­கள் ஆகி­யோர் நாளை முதல் கொவிட்-19 மூன்­றா­வது தடுப்­பூ­சிக்­குப் பதிந்து­கொள்­ள­லாம் என்று அழைப்பு விடுக்­கப்­படும் என்று கொவிட்-19 சிறப்­புப் பணிக்­குழு கடந்த வெள்­ளிக்­கி­ழமை தெரி­வித்­தது.

சிங்கப்பூரில் அண்­மைய வாரங்­களில் அன்றாட தொற்று எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­கிறது.

நாள்தோறும் புதி­தாக கிருமி தொற்­று­வோ­ரின் எண்­ணிக்கை 1,000ஐ தாண்­டக்­கூ­டும் என்று அந்­தச் சிறப்­புப் பணிக்­குழு எச்­சரித்து இருக்­கிறது.

அன்­றாட தொற்று எண்ணிக்கை கடந்த வாரத்­தில் நாள் ஒன்­றுக்கு 288 என்ற அள­வில் கூடி இருக்­கிறது. இது இரண்டு வாரங்­களுக்கு முன் 76 ஆக இருந்­தது.

கொவிட்-19 தொற்­றுப் பர­வல் வேகத்­தைக் கட்­டுப்­ப­டுத்த அவ­சி­ய­மற்ற சமூ­கக் கலந்­து­ற­வா­டல்­களை அடுத்த சில வாரங்­களுக்குத் தவிர்த்­துக்­கொள்­ளும்­படி மக்­க­ளுக்கு அதி­கா­ரி­கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முதி­யோர் பரா­ம­ரிப்பு விடு­தி­களில் தங்கி இருக்­கும் தங்­கள் உற­வி­னர் யாரா­வது தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­மல் இருந்­தால் அவர்­களை உட­ன­டி­யாக ஊசி போட்­டுக்­கொள்­ள ஊக்­கு­விக்கும் படி மக்­களை அமைச்சு ஞாயிற்­றுக்­கி­ழமை கேட்­டுக்­கொண்­டது.

தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளாத முதி­ய­வர்­களை கொவிட்-19 கிருமி தொற்­றி­னால் அத­னால் அவர் களுக்கு ஏற்­ப­டக்­கூ­டிய விளை­வு­கள் மிகக் கடு­மை­யா­ன­தாக இருக்­கும் என்­பது தெரி­ய­வந்­துள்­ளது.

தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட முதி­ய­வர்­கள், கிடைக்­கும்­போது பூஸ்­டர் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்ள வேண்­டி­ய­தும் முக்­கி­ய­மா­ன­தா­கும்.

இதன் மூலம் அவர்­க­ளின் உட­லில் நோய் தடுப்­பாற்­றல் தொடர்ந்து அதி­க­மாக இருந்து வரும்.

கடு­மை­யான கிருமி பாதிப்­பு­களில் இருந்து அவர்­கள் தங்களைப் பாது­காத்­துக் கொள்­ள­லாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தொற்று பரவலைத் தடுக்க, முதியோர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வசதியாக அக்டோபர் 11 வரை வருகை நிறுத்திவைப்பு