தமிழகம் முழுவதும் தடுப்பூசி: அலை அலையாக திரண்ட மக்கள்

தமிழகம் முழுவதும் தடுப்பூசி: அலை அலையாக திரண்ட மக்கள்

2 mins read
4708dab6-94c6-45db-9ec6-2ef562e01cf3
நாமக்கல் மாவட்டம் வெண்ணாந்தூர் ஊராட்சி ஒன்றியம் மசக்காளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று இடம்பெற்ற தடுப்பூசி முகாமில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், இரண்டாவது தடுப்பூசியைப் போட்டுக்கொண்டார். படம்: தமிழக ஊடகம் -

கொவிட்-19 கிரு­மித்­தொற்றை ஒடுக்க தடுப்­பூ­சியே வழி என்­ப­தால் நேற்று தமிழ்­நாடு முழு­வ­தும் மிகப் பெரிய அள­வில் தடுப்­பூசி இயக்­கம் மேற்­கொள்­ளப்­பட்­டது.

மாநிலம் முழு­வ­தும் 40,000க்கும் மேற்­பட்ட முகாம்­கள் அமைக்­கப்­பட்டு காலை 7 மணி முதல் தடுப்­பூசி போடப்­பட்­டது. தேர்­த­லில் வாக்­க­ளிக்க வரு­வ­தைப்போல மக்­கள் பல முகாம்­க­ளி­லும் காலை முதலே திரண்­ட­தாக ஊட­கத் தக­வல்­கள் கூறின.

அமைச்­சர்­கள் முதல் அதி­கா­ரி­கள், சமூ­கத் தலை­வர்­கள், பொது­மக்­கள், பாம­ரர்­கள் வரை சமூ­கத்­தில் 18 வய­திற்­கும் மேற்­பட்ட பல தரப்­பி­ன­ரும் முகாம்­க­ளுக்கு மிக­வும் ஆர்­வத்­து­டன் வந்­த­னர்.

மாநி­லம் முழு­வ­தும் ஒரே நாளில் ஏறத்­தாழ 2 மில்­லி­யன் மக்­க­ளுக்குத் தடுப்­பூசி போடும் நோக்­கத்­தில் பல்­வேறு ஏற்­பா­டு­களும் கடந்த ஒரு­வார கால­மாக வெகு­சி­றப்­பான முறை­யில் செய்­யப்­பட்­ட­தாக அதி­கா­ர­பூர்வ தக­வல்­கள் கூறின.

விழிப்­பு­ணர்வு முயற்­சி­கள், ஒலிபெருக்கி அறி­விப்­பு­கள், பாடல்­கள், கைபேசி­ குறுஞ்­செய்­தி­கள், வாக­ன விளம்­ப­ரங்­கள், சுவ­ரொட்­டி­கள், கையேடு­கள், துண்டு வெளி­யீ­டு­கள் போன்ற பல வழி­க­ளி­லும் மக்­க­ளி­டம் தடுப்­பூசி முக்­கி­யத்­து­வம் எடுத்­துக் கூறப்­பட்டது. தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளும்­படி கேட்­டுக்­கொள்­ளப்­பட்­டது.

அதி­கா­ரி­கள் வீட்­டுக்கு வீடு சென்­றும் மக்­களை உற்­சா­கப்­ப­டுத்­தி­னர். மருத்­து­வர்­கள், தாதி­யர்­கள், சுகா­தா­ரத் துறை ஊழி­யர்­கள், அங்­கன்­வாடி ஊழி­யர்­கள், ஆசி­ரி­யர்­கள், தொண்­டூ­ழி­யர்­கள் உள்­ளிட்ட பல தரப்­பி­ன­ரும் தடுப்­பூசி இயக்­கத்­தில் கலந்­து­கொண்டு பல வழி­களி­லும் உத­வி­னர். இவை ஒரு­பு­றம் இருக்க, நட­மா­டும் தடுப்­பூசி முகாம்­களும் செயல்பட்டன.

சென்­னை­யில் ஒரே நாளில் 3.25 லட்­சம் மக்­க­ளுக்குத் தடுப்­பூசி போடும் நோக்­கத்­து­டன் 1,600க்கும் மேற்­பட்ட முகாம்­கள் அமைக்­கப்­பட்­டன. 600 மருத்­து­வர்­கள், தாதி­யர்­கள் உள்­ளிட்ட ஏறத்­தாழ 7,000 பேர் சென்­னை­யில் மட்­டும் தடுப்­பூசி இயக்­கத்­தில் உத­வி­னர். தேவைக்கு அதி­க­மாக தடுப்­பூசி இருந்­த­தால் ஒரு­வர்கூட திருப்பி அனுப்­பப்­ப­ட­வில்லை என்று பல்­வேறு முகாம்­க­ளை­யும் மேற்­பார்­வை­யிட்ட உயர்­நிலை அதி­கா­ரி­கள் கூறினர்.

இத­னி­டையே, தடுப்­பூசி இயக்­கம் பற்றி கருத்துக் கூறிய சுகா­தாரத் துறைச் செய­லா­ளர் டாக்­டர் ராதா­கி­ருஷ்­ணன், தமி­ழகத்­தில் சனிக்கிழமைவரை 36.2 மில்­லி­யன் மக்­களுக்குத் தடுப்பூசி போடப்­பட்டுள்ளது என்றார். தேவைக்கு அதி­க­மா­கவே தடுப்­பூசி கையி­ருப்­பில் இருப்­ப­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.

காலை­யில் இருந்தே மக்­கள் பேரார்­வம் காட்­டு­வ­தால் 20 மில்­லி­யன் என்ற இலக்கை எட்­டி­விட முடி­யும் என்று சென்­னை­யில் ஒரு முகாமை நேற்று பார்­வை­யிட்­ட­போது அவர் நம்­பிக்கை தெரி­வித்­தார்.

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,639 பேருக்குத் தொற்று ஏற்பட்ட தாகவும் 27 பேர் மாண்டுவிட்டதாகவும் நேற்று அறிவிக்கப்பட்டது. மொத்த மரண எண்ணிக்கை 35,146 ஆக உள்ளது.