மலேசியாவின் லங்காவி உல்லாச தீவில் நேற்று சுற்றுப் பயணிகள் வந்திறங்கினர்.
முற்றிலும் தடுப்பூசி போட்டுக் கொண்ட சுற்றுப் பயணிகளுடன் கோலாலம்பூரில் இருந்து விமானம் நேற்றுக் காலை சுமார் 10.40 மணிக்கு லங்காவி அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கியது.
மலேசியாவின் சுற்றுலா, கலைகள், கலாசார அமைச்சு அமல்படுத்தும் பயண ஏற்பாடு திட்டத்தின்கீழ், 159 பயணிகளை ஏற்றிக்கொண்டு அந்த விமானம் நேற்று லங்காவியில் தரை யிறங்கியது. அவர்களை சுற்றுலா, கலைகள், கலாசார அமைச்சரும் இதர பிரமுகர்களும் வரவேற்றனர்.
லங்காவி தீவில் சுற்றுப் பயணிகள் வரவேற்கப்படுகிறார்கள் என்றும் அவர்கள் அங்கு விடுமுறையை மகிழ்ச்சிகரமான முறையில் செலவிடு வார்கள் என்றும் தான் நம்புவதாக கெடா மாநில முதல்வர் முகம்மது சனுசி குறிப்பிட்டார்.
இருந்தாலும் கொரோனா கிருமித் தொற்றைத் தவிர்த்துக் கொள்ளும் வகையில், நிபந்தனைகளை முழுமை யாகக் கடைப்பிடித்து ஒவ்வொருவரும் பாதுகாப்பை உறுதிப் படுத்துவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். இன்று தரை வழியாகவும் கடல் வழியா கவும் 2,500க்கும் மேற்பட்ட சுற்றுப் பயணிகள் லங்காவிக்கு வருகை தரு வார்கள் என்று அவர் நேற்று கூறினார்.
இதனிடையே, விடுமுறை நிமித்தம் லங்காவிக்கு வரும் பயணிகளும் சுற்றுலா நிறுவனங்களும் கொவிட்-19 கிருமித்தொற்றைத் தடுப்பதற்கான வழி காட்டி நெறிமுறைகளை முழுமையாகக் கடைப்பிடித்து பாதுகாப்பாக நடந்து கொள்கிறார்கள் என்பதை போலிஸ் சுற்றுக்காவல் மூலம் உறுதிப்படுத்தும் என்று மாநில போலிஸ் தலைவர் கமாரூல் மமாட் தெரிவித்தார்.
லங்காவி யில் பல இடங்களிலும் பாதுகாப்பையும் போலிஸ் உறுதிப்படுத்தும் என்றார் அவர்.