கொவிட்-19 ‘பூஸ்டர்’ தடுப்பூசியைப் போட்டுக்கொண்டார் பிரதமர் லீ

பிரதமர் லீ சியன் லூங், சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 17) கொவிட்-19 ‘பூஸ்டர்’ தடுப்பூசியைப் போட்டுக்கொண்டார்.

முதலிரு தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்ட எட்டு மாதங்கள் கழித்து பூஸ்டர் தடுப்பூசியை அவர் போட்டுக்கொண்டார். இவ்வாண்டு ஜனவரியில் பிரதமர் லீ ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டார்.

“கொவிட்-19 பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. கொவிட்-19க்கு எதிரான உங்களது பாதுகாப்பை பூஸ்டர் தடுப்பூசி வலுப்படுத்தும்,” என்று பிரதமர் லீ தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.

அறுபது வயது மற்றும் அதற்கும் மேற்பட்டோர், நோயெதிர்ப்பாற்றல் குறைவாக உள்ளவர்கள், முதியோர் பராமரிப்பு இல்லங்களில் வசிப்பவர்கள் ஆகியோர் பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளுமாறு கொவிட்-19 தடுப்பூசிகள் தொடர்பான சிங்கப்பூரின் நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளதை பிரதமர் லீ சுட்டினார்.

“உங்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்பட்டால் அதைப் போட்டுக்கொள்ளுங்கள். நீங்கள் கடுமையாக நோய்வாய்ப்படும் அல்லது தீவிர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்லும் சாத்தியத்தை அது குறைக்கும்,” என்றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!