'விரைவில் அன்றாடப் பாதிப்பு ஆயிரத்தை எட்டக்கூடும்'

'விரைவில் அன்றாடப் பாதிப்பு ஆயிரத்தை எட்டக்கூடும்'

2 mins read

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 அன்­றாடப் பாதிப்பு விரை­வில் ஆயி­ரத்தை எட்­டக்­கூ­டும் என்று சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் தெரி­வித்­துள்­ளார்.

கடந்த சில வாரங்­க­ளாக கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோ­ரின் எண்­ணிக்கை ஒவ்­வொரு வார­மும் இரு­ம­டங்கு அதி­க­ரித்து வரு­வதை அவர் சுட்­டி­னார்.

கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோ­ரின் எண்­ணிக்கை அதிகரிப்­பது எதிர்­பா­ராத ஒன்­றல்ல என்று கொவிட்-19க்கு எதி­ரான அமைச்­சர்­நிலை பணிக்­குழு நேற்று நடத்­திய செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் திரு ஓங் தெரி­வித்­தார்.

"கொவிட்-19 சூழலை இயல்­பான ஒன்­றாக ஏற்­றுக்­கொள்­ளத் தயா­ராக இருக்­கும் நாடு­கள் ஏதா­வது ஒரு கட்­டத்­தில் நிச்­ச­யம் பெரிய கிரு­மிப் பர­வல் அலையை எதிர்­நோக்­கி­யாக வேண்­டும்," என்­றார் அவர்.

நிலைமை சீர­டை­வ­தற்கு முன்பு வேறு வழி­யின்றி பய­ணம் செய்ய வேண்­டிய பாதை­யாக சிங்­கப்­பூர் எதிர்­நோக்­கும் சூழ்­நி­லையை அமைச்­சர் ஓங் வர்­ணித்­தார்.

நேற்று முன்­தின நில­வ­ரப்­படி சிங்­கப்­பூ­ரில் மேலும் 910 பேருக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டது. அவர்­களில் 803 பேருக்கு சமூக அள­வில் பாதிப்பு ஏற்­பட்­டது. வெளி­நாட்டு ஊழி­யர்­

க­ளுக்­கான தங்­கு­வி­டு­தி­களில் 103 பேர் நோய்­வாய்ப்­பட்­ட­னர்.

வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்கு வந்த நால்­வ­ருக்­குக் கிரு­மித்­தொற்று இருப்­பது உறுதி செய்­யப்­பட்­டது.

சிங்­கப்­பூ­ரில் புதிய கொவிட்-19 அலை ஏற்­பட்டு நேற்­று­டன் 26 நாட்­கள் ஆகிறது. அடுத்த

நான்­கி­லி­ருந்து எட்டு வாரங்

­க­ளுக்­குள் கிரு­மிப் பர­வல்

உச்­சத்­தைத் தொடக்கூடும் என்று அமைச்­சர் ஓங் கூறி­னார்.

இரண்டு வாரங்­க­ளுக்கு முன்பு அன்­றாடப் பாதிப்பு சரா­சரியாக 146ஆக இருந்­தது.

ஆனால் இந்த எண்­ணிக்கை கடந்த வாரம் 682ஆக ஏற்­றம் கண்­டது. பாதிப்­ப­டைந்­தோ­ரில் பெரும்­பா­லா­னோ­ருக்கு நோய்க்­கான அறி­குறி ஏதும் இல்லை என்று தெரி­விக்­கப்­பட்­டது.

நோயால் கடு­மை­யா­கப் பாதிக்­கப்­பட்­டோ­ரின் எண்­ணிக்கை தொடர்ந்து குறை­வாக இருந்து வரு­கிறது. நேற்று முன்­தின நில­

வ­ரப்­படி 77 பேருக்கு உயிர்­வாயு சுவா­சக் கருவி தேவைப்­ப­டு­வ­தா­க­வும் 12 பேர் தீவிர சிகிச்­சைப் பிரி­வில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

சிங்­கப்­பூர் சில நிச்­ச­ய­மற்ற சூழ்­நி­லை­களை எதிர்­நோக்­கு­வ­தாக திரு ஓங் கூறி­னார்.

பாதிப்பு குறை­வ­தற்கு முன்பு இன்­னும் எத்­தனை நாட்­க­ளுக்கு அன்­றாடப் பாதிப்பு அதி­க­ரிக்­கும் எனத் தெரி­ய­வில்லை என்­றார் அவர். அன்­றாடப் பாதிப்பு அதி

கரிப்­ப­தால் தீவிர சிகிச்­சைப்

பிரி­வி­லும் மருத்­து­வ­ம­னை­க­ளி­லும் படுக்­கைப் பற்­றாக்­குறை ஏற்­ப­டுமா என்­பது குறித்­தும் தெரி­ய­வில்லை என்று திரு ஓங் அக்­கறை தெரி­வித்­தார்.

இவற்­றைச் சமா­ளிக்க வீட்­டில் இருந்­த­வாறு குண­ம­டை­யும் திட்­டம் விரி­வு­ப­டுத்­தப்­படும் என்­றார் அவர். 12 வய­தி­லி­ருந்து 69 வய­துக்கு உட்­பட்ட கொவிட்-19 நோயாளிகளுக்கு வீட்­டில் இருந்­த­வாறு குண­ம­டை­யும் திட்­டம் கட்­டா­ய­மாக்­கப்­படும். கொவிட்-19 பரி­சோ­த­னை­யைச் சுய­மா­கச்

செய்­துகொள்ளத் தேவை­யான சாத­னங்­க­ளைப் பெற்­றுக்­கொள்ள ஏதுவாக நாடெங்­கும் 56 இடங்­களில் 100 தானி­யங்கி இயந்­தி­ரங்­கள் வைக்­கப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.