தேர்தலில் மீண்டும் நஜிப் போட்டியிடக்கூடும்

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு போட்டியிடும் சாத்தியத்தை மறுக்கவில்லை.

அவர் இதை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். 1எம்டிபி விவகாரம் தொடர்பிலான ஒரு குற்றச்சாட்டின் பேரில் ஊழல் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு, 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் நஜிப் தேர்தலில் போட்டியிட இயலாத சூழல் உள்ளது.

அந்தக் குற்றத் தீர்ப்பை மறுத்து நஜிப் மேல்முறையீடு செய்துள்ளார். அவர் இன்னமும் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார்.

இருந்தாலும் நாட்டின் மாமன்னரிடம் இருந்து மன்னிப்பு பெற்றாலொழிய அவர் அரசமைப்புச் சட்டத்தின்படி தேர்தலில் போட்டியிட முடியாது.

நஜிப்பின் அம்னோ கட்சி பிரதமர் பதவியைப் சென்ற மாதம் பெற்றது. அக்கட்சி அதிகாரத்திற்கு வந்ததை அடுத்து, குற்றச்சாட்டுகளை எதிர் நோக்கும் கட்சித் தலைவர்கள் மீது கருணை காட்டப்படலாம் என எதிர்த் தரப்பினர் அச்சம் தெரிவித்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!