நிரம்பிவழியும் மருத்துவமனைகள்

நிரம்பிவழியும் மருத்துவமனைகள்

2 mins read
fc14b540-9a38-41b1-ac41-b2a5d8235bd7
விபத்து, அவசர சிகிச்சைப் பிரிவு களுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் மிதமான தொற்று நோய் சுவாசப் பிரச்சினை அறிகுறிகள் உள்ள வர்கள் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்றுக் கொள்ளும்படி சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. -

கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதால் மருத்துவமனைகள் நிரம்பி வழியும் நிலை ஏற்பட்டுள்ளது.

பெரும்­பா­லான அரசு மருத்­து­வ­மனை­ க­ளின் விபத்து, அவ­சர பிரிவு­களில் சென்ற ஆகஸ்ட் மாதத்­தை­விட சென்ற வாரம் கூட்­டம் அதி­கம் காணப்பட்டது.

மருத்­து­வ­ம­னை­களில் சேர்ந்து சிகிச்சை பெற­வேண்­டிய நோயாளி­களில் சிலர் படுக்­கைக்­காக அதிக காலம் காத்­தி­ருக்க வேண்டியிருந்தது என்று சுகா­தார அமைச்சு நேற்று தெரி­வித்­தது. அவ­சர சிகிச்சைப் பிரி­வு­க­ளுக்கு சிகிச்சை நாடி வந்த கொவிட்-19 நோயாளி­க­ளின் எண்­ணிக்­கை­யும் அதி­க­ரித்­தது.

அத்­த­கைய நோயா­ளி­க­ளுக்கு மேலும் படுக்­கை­களை ஏற்­ப­டுத்­தித் தர­வேண்­டியநிலை இருந்­த­தாக அமைச்­சின் பேச்­சா­ளர் ஒரு­வர் கூறி­ய­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளேடு தெரி­வித்­தது.

அவ­ச­ர­மற்ற அறுவை சிகிச்­சை ­களை­யும் அவ­சர சிகிச்சை தேவைப் ­ப­டாத நோயா­ளி­க­ளை­யும் மருத்­து­வ­ மனை­கள் குறைத்­துக்­கொண்டு வரும் வேளை­யில் மருத்­து­வ­ம­னை­க­ளின் ஒட்­டு ­மொத்­தப் பயன்­பாட்­டுக்கு நெருக்­கடி மேலும் அதி­க­மாகி வரு­கிறது என்று அவர் கூறி­னார்.

சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் ஞாயிற்­றுக்­கி­ழமை ஃபேஸ்புக் பக்­கத்­தில் இது பற்றி கருத்து கூறி­யி­ருந்­தார்.

"இந்­தக் கால­கட்­டத்­தில் நம்­மு­டைய மருத்­து­வ­ம­னை­க­ளுக்­கும் சுகா­தார பரா­ம­ரிப்­புத் துறை ஊழி­யர்­க­ளுக்­கும் சுமை அள­வுக்கு அதி­க­மாக அதி­க­ரிக்­கக் கூடாது. இதுவே சுகா­தார அமைச்சு எதிர்­நோக்­கும் ஆகப்­பெ­ரிய சவால். இதற்­குத் தீர்­வு­காண முடிந்­த­வரை பாடு­பட்டு வரு­கி­றோம்," என்று அமைச்­சர் தெரி­வித்­தி­ருந்­தார். முற்­றி­லும் தடுப்­பூசி போட்டுக்­கொண்ட இளம் வய­தி­னர், கொவிட்-19 தொற்று ஏற்­பட்­டால் வீட்­டில் இருந்தே குண­ம­டைய வேண்­டும் என்று வலி­யு­றுத்­தப்­ப­டு­வ­தற்கு இதுவே கார­ணம் என்­றும் அவர் குறிப்பிட்­டார்.