வெளிநாடுகளுக்கு சிறப்புப் பாதை விரிவாக்கம்

வெளிநாடுகளுக்கு சிறப்புப் பாதை விரிவாக்கம்

2 mins read

சிங்­கப்­பூர் சாங்கி விமான நிலை­ய­மும் சிங்­கப்­பூர் ஏர்­லைன்­சும் மீண்­டும் உய­ரத்­தில் பறக்க ஆன அனைத்­தை­யும் செய்­வோம் என்று போக்­கு­வ­ரத்து அமைச்­சர் எஸ். ஈஸ்­வ­ரன் கூறி­யுள்­ளார்.

சிங்­கப்­பூ­ரின் பொரு­ளி­ய­லுக்கு விமா­னப் போக்­கு­வ­ரத்­தும் உலக நாடு­க­ளு­ட­னான தொடர்­பும் அவ­சி­யம் என்­றார் அவர்.

கொள்­ளை­நோய் பர­வல் கார­ண­மாக சாங்கி விமான நிலை­ய­மும் எஸ்­ஐ­ஏ­யும் ஏறக்­கு­றைய முடங்கிக் கிடக்­கின்­றன.

இத­னைச் சுட்­டிக்­காட்­டிய அமைச்­சர், தற்போது சாங்கி விமான நிலை­யம் மூன்று விழுக்­கா­டும் சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் நான்கு விழுக்­கா­டும் செயல்­ப­டு­வ­தா­கத் தெரி­வித்­தார்.

விமா­னத் தொழில்­துறை மீட்­சி­ய­டைய சிலகாலம் பிடிக்­க­லாம் என்ற அவர், சாங்­கி­யும் எஸ்­ஐ­ஏ­யும் மீண்­டும் உய­ரத்­தில் பறப்­ப­தற்­கான அனைத்து முயற்­சி­களும் எடுக்­கப்­படும் என்று உறுதியளித்­தார்.

போக்­கு­வ­ரத்து அமைச்சின் இரு­பது ஆண்­டுகாலப் பயணத்தை நினைவு­கூ­ரும் நிகழ்ச்சியில் பங்­கேற்ற பிறகு அமைச்சர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­னார்.

வெளி­நாட்­டுப் பய­ணி­கள் சிங்­கப்­பூ­ரில் நுழை­வ­தற்­காக அமைக்­கப்­பட்ட சிறப்பு தடுப்­பூசி பய­ணப்­பாதை இதர நாடு­க­ளுக்­கும் விரி­வு­ப­டுத்­தப்­படும் என்று அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

இந்­தச்சிறப்­புத் திட்­டம் அறி­மு­கப்படுத்­தப்­பட்ட பிறகு சுமார் 900க்கும் மேற்­பட்ட வெளி­நாட்­டுப் பய­ணி­கள் சிங்­கப்­பூர் வந்­துள்­ள­னர். அவர்­களில் ஒரு­வர் மட்­டுமே கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தார். இந்­தத் திட்­டத்­தின் கீழ் வரு­ப­வர்­க­ளுக்கு தனிமை உத்­த­ரவு கிடை­யாது.

செப்­டம்­பர் 8ஆம் தேதியன்று திட்­டம் அறிமுகமானது.

ஆரம்­பத்­தில் புருணை, ஜெர்­மனி பய­ணி­க­ளுக்கு மட்­டுமே அனு­மதி வழங்­கப்­பட்­டது. வீட்­டில் தங்­கி­யி­ருக்­கும் உத்­த­ரவை நிைறவேற்­று­வ­தற்­குப் பதி­லாக பய­ணி­கள் அனை­வ­ரும் நான்கு முறை கொவிட்-19 பல்­ப­டி­யத் தொடர்­வினை(பிசி­ஆர்) சோத­னை­யைச் செய்­து­கொள்ள வேண்­டும்.

"முதல் இரண்டு வாரத்­தி­லேயே திட்­டம் நம்­பிக்­கை­ய­ளிக்­கும் வகை­யில் இருந்­தது. இந்­தப்­ பாதை வழி­யாக வந்த 900க்கும் மேற்­பட்ட பய­ணி­கள் கட்­டா­யச்­சோ­த­னை­களை முழு­மை­யாக நிறை­வேற்­றி­யுள்­ள­னர்.

"சிறப்­புப்­பாதை வழி­யாக வந்த பயணி களில் ஒரு­வ­ருக்கு மட்­டுமே தொற்று இருப்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. உடனே அவர் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டார். இந்­தத் திட்­டம் சிறப்பாகச் செயல்­ப­டு­வ­தையே இது காட்­டு­கிறது. சிங்கப்பூர் பாதுகாப்பாக திறக்கப்படுவது மிகவும் முக்கியம். சிங்­கப்­பூ­ரின் பய­ணப்­பாதை திறக்­கப்­ப­டு­வதை பல நாடு­களும் ஆர்­வ­மு­டன் எதிர்­பார்க்­கின்­றன," என்று அமைச்­சர் ஈஸ்­வ­ரன் தெரி­வித்­தார்.