சிங்கப்பூரில் புதிதாக 917 பேருக்கு கொவிட்-19 தொற்று; மேலும் இருவர் உயிரிழப்பு

சிங்கப்பூரில் 80 வயதுக்கு மேற்பட்ட இரு சிங்கப்பூரர்கள் கொவிட்-19 தொற்றால் ஏற்பட்ட உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக உயிரிழந்தனர்.

முதலாமவர், 84 வயது ஆடவர். அவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

இரண்டாமவர், 85 வயது ஆடவர்.

இந்நிலையில், சிங்கப்பூரில் புதிதாக 917 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானதாக சுகாதார அமைச்சு திங்கட்கிழமை (செப்டம்பர் 20) தெரிவித்தது.

ஒப்புநோக்க, ஞாயிற்றுக்கிழமை 1,012 பேருக்குத் தொற்று உறுதியாகியிருந்தது.

உள்ளூரில் கிருமி தொற்றுக்கு ஆளானவர்களில் சமூக அளவில் 832 பேரும் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் 78 பேரும் அடங்கும். அவர்களில் 230 பேர் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்தோர்.

வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூர் வந்த ஏழுப் பேருக்கும் தொற்று உறுதியானது.

மருத்துவமனைகளில் தற்போது 1,055 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதற்கு முந்தைய தினம் இந்த எண்ணிக்கை 873ஆக இருந்தது.

செயற்கை உயிர்வாயு தேவைப்படுவோர் எண்ணிக்கை 118லிருந்து 128ஆக உயர்ந்தது.

தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் உள்ளோர் எண்ணிக்கை 21லிருந்து 18ஆக குறைந்தது.

கடுமையாக நோய்வாய்ப்பட்டோரில் 122 பேர் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்தோர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!