எங்களால் இயன்ற அனைத்தையும் செய்கிறோம்

எங்களால் இயன்ற அனைத்தையும் செய்கிறோம்

2 mins read
02fcece2-85b2-40c2-bd9e-3f51f2556f31
கொவிட்-19 சம்பவங்களின் நிர்வாகப் பணிக்குழுச் செயல்பாட்டு அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் சென்று பார்வையிட்டார் பிரதமர் லீ. படம்: தொடர்பு, தகவல் அமைச்சு -

கொவிட்-19 தொடர்பான செயல்பாடுகள் குறித்து பிரதமர் லீ சியன் லூங்

நாளுக்கு நாள் சிங்­கப்­பூ­ரில் அதி­க­ரித்­து­வ­ரும் கொவிட்-19 சம்­ப­வங்­க­ளுக்­கி­டையே, கிரு­மித்­தொற்று தொடர்­பான செயல்­பா­டு­களை விரி­வு­ப­டுத்­து­வ­தற்­காக தன்­னால் இயன்ற அனைத்­தை­யும் சிங்­கப்­பூர் செய்து வரு­வ­தாக பிர­த­மர் லீ சியன் லூங் நேற்று தமது ஃபேஸ்புக் பதி­வில் குறிப்­பிட்­டுள்­ளார்.

நோயா­ளி­கள் நன்கு பரா­ம­ரிக்­கப்­ப­டு­வதை உறு­தி­செய்­வ­தில் அர­சாங்­கம் மும்­மு­ரம் காட்டு­வ­தாக அவர் தெரி­வித்­தார்.

"கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் குடும்ப உறுப்­பி­னர்­கள் பாதிக்­கப்­பட்­டி­ருப்­ப­வர்­க­ளுக்கு இது நெருக்­கடி­யான ஒரு கால­கட்­டம் என்­பதை நான் அறி­வேன்," என்­றார் அவர்.

"தற்­போ­தைய நிலை­மை­யால் தங்­க­ளுக்கு ஏற்­பட்ட அதி­ருப்தி குறித்து ஒரு சிலர் தமக்கு எழுதி­ இ­ருந்­த­தை­யும் அவர் குறிப்­பிட்­டார்.

கிரு­மித்­தொற்று இருப்­பதை பரி­சோ­தனை வழி உறு­தி­செய்­வ­தற்­கும் மருத்­து­வ­ம­னைக்கோ சமூ­கப் பரா­ம­ரிப்பு வளா­கத்­திற்கோ பின்­னர் கொண்டு செல்­லப்­ப­டு­வ­தற்­கும் இடையே காத்­தி­ருக்­கும் நேரம் அதி­க­மாக இருப்­ப­தாக கடந்த வாரங்­களில் பலர் தெரி­வித்­தி­ருந்­த­னர்.

கிரு­மித்­தொற்று தங்­க­ளுக்கு இருப்­பதை உறு­தி­செய்த பின்­னர், என்ன செய்­வது என்று கேட்­ப­தற்­காக சுகா­தார அமைச்சை அணு­கி­ய­போது, அமைச்­சைத் தொடர்பு­கொள்ள முடி­ய­வில்லை என்­றும் வேறு சிலர் கூறி­யுள்­ள­னர்.

கொவிட்-19 சம்­ப­வங்­க­ளுக்­கான நிர்­வா­கப் பணிக்­கு­ழுச் செயல்­பாட்டு (சிஎம்­டிஜி) அலு­வ­ல­கத்­திற்கு பிர­த­மர் லீ நேற்று முன்­தி­னம் சென்­றி­ருந்­தார்.

கொவிட்-19 நோயாளி என்று கண்­ட­றி­யப்­படும் ஒரு­வ­ருக்­கு­ரிய முழு செயல்­மு­றை­யை­யும் நிர்­வகிக்­கும் பொறுப்பை இப்­ப­ணிக்­குழு ஏற்­றுள்­ளது.

நோயா­ளி­யைத் தகுந்த பரா­மரிப்பு வளா­கத்­திற்கு அனுப்­பு­தல், போக்­கு­வ­ரத்­துக்கு ஏற்­பாடு செய்­தல், குறிப்­பாக வீட்­டில் இருந்­த­வாறு குண­ம­டை­வது போன்ற சூழல்­களில் என்­னென்ன செய்ய வேண்­டும் என்று விளக்­கு­தல் ஆகிய பணி­களை இக்­குழு மேற்­கொண்டு வரு­கிறது.

"சிஎம்­டி­ஜிக்கு தரப்­பட்­டுள்ள பொறுப்பு, மிக­வும் சவால்­மிக்க ஒன்று. அதி­வே­க­மாக மாறி­வ­ரும் சூழ்­நி­லை­யில் தொடர்ந்து 24 மணி நேர­மாக அவர்­கள் இயங்கி வரு­கின்­ற­னர். கிரு­மித்­தொற்­றுச் சம்­பவங்­க­ளின் எண்­ணிக்கை தொடர்ந்து அதி­க­ரிக்­கிறது.

"நம் செயல்­பா­டு­களை விரி­வு­படுத்த எங்­க­ளால் முடிந்த அனைத்­தை­யும் செய்­கி­றோம். நோயா­ளி­கள் நன்கு பரா­ம­ரிக்­கப்­ப­டு­வ­தை­யும் நாங்­கள் உறு­தி­செய்து வரு­கிறோம்," என்­றார் திரு லீ.