மருத்துவமனை படுக்கைப் பிரிவுகளுக்குள் வருகையாளர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்

மருத்துவமனை படுக்கைப் பிரிவுகளுக்குள் வருகையாளர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்

2 mins read

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுச் சம்­ப­வங்­கள் அதி­க­ரித்­து­வ­ரும் நிலை­யில், நாளை­மு­தல் மருத்­து­வ­மனை படுக்­கைப் பிரி­வு­க­ளுக்­குள் வரு­கை­யா­ளர்­கள் அனு­ம­திக்­கப்­ப­ட­மாட்­டார்­கள் என்று சுகா­தார அமைச்சு அறி­வித்­துள்­ளது.

இந்த நடை­முறை, அக்­டோ­பர் 23ஆம் தேதி­வரை நான்கு வாரங்­களுக்கு நீடிக்­கும் என்­றும் கூறப்­பட்­டது. சமூ­கத்­தில் குறிப்­பாக பதி­வா­கும் கொவிட்-19 சம்­ப­வங்­கள் அதி­க­ரித்து வரு­வ­தால் இவ்­வாறு கட்­டுப்­பா­டு­கள் கடு­மை­யாக்­கப்­பட்­டுள்­ளன. அத்­து­டன் மருத்­து­வ­ம­னைப் பணி­யா­ளர்­கள், நோயாளி­கள், வரு­கை­யா­ளர்­கள் ஆகி­யோ­ரி­டையே கிரு­மித்­தொற்று கண்­ட­றி­யப்­ப­டு­வ­தும் அதி­க­ரித்­துள்­ள­தா­கக் கூறப்­பட்­டது.

படுக்­கைப் பிரி­வு­கள், வரு­கை­யா­ளர்­க­ளுக்கு மூடப்­ப­டு­வ­தற்­கும் பணி­யா­ளர்­கள் தனி­மைப்­ப­டுத்­தப்­படு­வ­தற்­கும் இது இட்­டுச் சென்­றது. இத­னால், மருத்­து­வ­ம­னைப் படுக்­கை­க­ளுக்­கான தேவை­யும் அதி­க­ரித்­து­விட்­டது. மருத்­து­வ­மனை­யில் சிகிச்சை பெற்­று­வ­ரும் கொவிட்-19 நோயாளி­க­ளைப் பரா­ம­ரிக்க, கூடு­தல் மருத்­து­வ­ம­னைப் படுக்­கை­கள் தேவைப்­ப­டு­வ­தால், தற்­போ­தைய நிலைமை அழுத்­தத்தை ஏற்­ப­டுத்­தத் தொடங்­கி­யுள்­ள­தாக அமைச்சு குறிப்­பிட்­டது.

இந்­நி­லை­யில், குறிப்­பிட்ட சில நோயா­ளி­க­ளைப் பார்ப்­ப­தற்கு வரு­கை­யா­ளர்­கள் அனு­ம­திக்­கப்­ப­டு­வர் என்­றும் இது அந்­தந்த மருத்­து­வ­ம­னை­யைப் பொறுத்து முடி­வெ­டுக்­கப்­படும் என்­றும் அமைச்சு குறிப்­பிட்­டது. தீவிர சிகிச்சை பெறும் நோயா­ளி­கள், சிறார் நோயாளி­கள், குழந்தை பிறக்­க­வி­ருக்­கும் அல்­லது பிறந்த பின்­னர் சிகிச்சை நாடி­வ­ரும் தாய்­மார்­கள், பரா­ம­ரிப்­பா­ளர்­க­ளி­ட­மி­ருந்து கூடு­தல் ஆத­ரவு தேவைப்­படும் நிலை­யில் உள்ள நோயா­ளி­கள் ஆகி­யோ­ருக்கு இந்த விதி­வி­லக்கு பொருந்த­லாம்.

தீவிர சிகிச்சை பெற்று வரும் நோயா­ளியை, ஐந்து வரு­கை­யாளர்­கள் பார்க்க அனு­ம­திக்­கப்­ப­டு­வர். ஆனால் ஒரு சம­யத்­தில் நோயாளி அருகே அதி­க­பட்­சம் இரு­வர் மட்­டுமே இருக்க முடி­யும். நோயா­ளி­யைப் பார்ப்­ப­தற்கு முன் 24 மணி நேரத்­திற்­குள் 'ஏஆர்டி' அல்­லது 'பிசி­ஆர்' பரி­சோ­தனை செய்து, கிரு­மித்­தொற்று இல்லை என்­பதை வரு­கை­யா­ளர்­கள் உறு­தி­செய்ய வேண்­டும்.

இதற்­கி­டையே அவ­ச­ர­கா­லப் பிரி­வில் கூட்­டத்­தைக் கட்­டுப்­ப­டுத்­தும் வகை­யில் சில கட்­டுப்­பா­டு­களை அமைச்சு அறி­மு­கம் செய்­ய­வுள்­ளது. அதிக அபா­யத்­தில் உள்ள நோயா­ளி­கள், கொவிட்-19க்கு எதி­ரான தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்­ட­வ­ராக இருந்­தாலும் இல்­லா­விட்­டா­லும் கட்­டா­ய­மாக ஆண்­டி­ஜன் விரைவு பரி­சோ­த­னையை மருத்­து­வ­ம­னை­யின் அவ­சர சிகிச்­சைப் பிரி­வு­களில் செய்­து­கொள்­ள­வேண்­டும் என்­றும் அமைச்சு நேற்று அறி­வித்­தது. இது நாளை முதல் நடை­மு­றைக்கு வரு­கிறது.

"அவ­ச­ர­நிலை அற்ற, மித­மான தொற்று அறி­கு­றி­கள் இருப்­ப­வர்­கள், மருத்­து­வ­ம­னை­களில் சிகிச்சை நாடு­வ­தைத் தவிர்க்­கு­மாறு கேட்­டுக்­கொள்­கி­றோம்," என்று அமைச்சு வலி­யு­றுத்­தியது.