குடும்ப வன்முறையால் பாதிப்பு: கூடுதல் பாதுகாப்பு அவசியம்

குடும்ப வன்முறையால் பாதிப்பு: கூடுதல் பாதுகாப்பு அவசியம்

2 mins read
a040fce6-1c15-4b82-979a-64071208d835
-

குடும்ப வன்­மு­றை­யால் பாதிக்­கப்­ப­டு­ப­வர்­கள், உதவி பெற­வும் தங்­களைத் தற்­காத்­துக்­கொள்­ள­வும் மேலும் எளிய வழி­களை நாட­லாம். இதன் தொடர்­பில் அமைக்­கப்­பட்ட பணிக்­குழு அதன் பரிந்­து­ரை­களைச் சமர்ப்­பித்­துள்ள நிலை­யில் அர­சாங்­கம் அவற்­றைப் பரி­சீ­லிக்க உள்­ளது.

வன்­மு­றைக்கு ஆளா­வோ­ரின் அனு­மதி இல்­லா­ம­லும் சமூ­க­ந­லப் பிரி­வின் தலைமை இயக்­கு­நர் போன்ற மூன்­றாம் தரப்­பி­னர், அவர் சார்­பாக 'பிபிஓ' எனப்­படும் தனி­நபர் பாது­காப்பு ஆணைக்கு விண்­ணப்­பிக்­க­லாம். மறு­வாழ்­வுக்­கான உத்­த­ர­வு­களை மீறு­வோர் மீது மேலும் கடு­மை­யான நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட வேண்­டும் என்­றும் பணிக்­குழு அதன் பரிந்­துரையை முன்­வைத்­துள்­ளது.

தற்­போது சிறார், முதி­யோர் துன்­பு­றுத்­தல் சம்­ப­வங்­க­ளைக் கண்­கா­ணிக்­கும் குழு ஒன்று உள்­ளது. திட்­டத்தை விரி­வு­ப­டுத்­தித் துன்­பு­றுத்­தப்­படும் வாழ்க்­கைத் துணை­களை­யும் பாது­காக்க பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளது. குடும்ப வன்­மு­றை­யால் பாதிக்­கப்­ப­டு­வோ­ருக்கு அலு­வ­லக நேரத்­திற்­குப் பின்­னும் பாது­காப்பு அளித்­திட, சமூ­கச் சேவை நிபு­ணர்­கள் கொண்ட அவ­ச­ர­நிலை செயல்­பாட்­டுக் குழு ஒன்று அமைக்­கப்­ப­ட­லாம். காவல் அதி­கா­ரி­க­ளு­டன் இக்­குழு இணைந்து செயல்­படும்.

குடும்ப வன்­மு­றைச் சம்­ப­வங்­களை விசா­ரிக்­கும் காவல் அதி­கா­ரி­கள், அவற்­றைத் தகுந்த திறன்­க­ளு­ட­னும் சரி­யான தக­வல்­களு­ட­னும் கையா­ளப் பயிற்­சி­யும் தேவை என்று பணிக்­குழு குறிப்­பிட்­டுள்­ளது. வன்­மு­றை­யு­டன் ஒரு­வர் செயல்­பட்­ட­தற்கு அவ­ரது மன­ந­லம் கார­ணமா என்­ப­தைக் கண்­ட­றிய, கட்­டாய மதிப்­பீடு மற்­றும் சிகிச்­சைக்கு அனுப்­பப்­ப­டு­வது தொடர்­பில் சட்­டத்­தில் மாற்­றம் செய்­யப்­பட வேண்­டும் என்­றும் அந்த உத்­த­ரவை குடும்ப நீதி­மன்­றம் பிறப்பிக்கவேண்­டும் என்­றும் பணிக்­குழு குறிப்­பிட்­டுள்­ளது.

கொவிட்-19 கொள்­ளை­நோய் சூழ­லில் குடும்ப வன்­மு­றைச் சம்­ப­வங்­கள் அதி­க­ரித்­து­விட்­டன. மேலும், இவ்­வாண்டு பெண்­கள் தொடர்­பான வெவ்­வேறு விவ­காரங்­களை சிங்­கப்­பூ­ரும் ஆராய்ந்து வரு­கிறது. இதற்­கி­டையே, பணிக்­கு­ழு­வின் பரிந்­து­ரை­கள் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளன. இவ்­வாண்டு மார்ச் 31ஆம் தேதி முடி­வ­டைந்த 2020 நிதி­யாண்டு நில­வ­ரப்­படி, குடும்ப வன்­முறை தொடர்­பில் இயங்­கி­வரும் சிறப்பு நிலை­யங்­க­ளில் தகவல் கேட்டு 4,574 கோரிக்கைகள் வந்­த­தா­கக் கூறப்­பட்­டது. இது 2018 நிதி­யாண்­டின் 2,906 கோரிக்கை­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில், 57% அதி­க­ரிப்­பா­கும்.

இந்த அதி­க­ரிக்­கும் போக்கு குறித்து சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு துணை அமைச்­ச­ரும் பணிக்­கு­ழு­வின் இணைத் தலை­வ­ரு­மான சுன் ஷுவெ­லிங் கருத்­துத் தெரி­வித்­தார். நிதி நெருக்­கடி, ஒரே நெருக்­கு­த­லான இடத்­தில் குடும்ப உறுப்­பி­னர்­கள் சேர்ந்து இருக்க வேண்­டிய சூழல் ஆகி­ய­வற்­றால் உணர்ச்சிபூர்வமான பாதிப்பு ஏற்­பட்டு அது குடும்ப வன்­மு­றைக்கு இட்­டுச் செல்­ல­லாம் என்­றார் அவர்.

பணிக்­குழு கடந்த ஆண்டு பிப்­ர­வரி மாதம் அமைக்­கப்­பட்­டது. அறிக்­கை­யைப் பணிக்­குழு அர­சாங்­கத்­தி­டம் சமர்ப்­பித்­துள்­ளதை அடுத்து, பரிந்­து­ரை­கள் வரும் வாரங்­களில் ஆரா­யப்­படும் என்று சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சர் மச­கோஸ் ஸுல்­கி­ஃப்லி தெரி­வித்­தார்.

மேலும் செய்திகள்: பக்கம் 3