முதல் சமூக சிகிச்சை வளாகம் செயல்படத் தொடங்கியது

முதல் சமூக சிகிச்சை வளாகம் செயல்படத் தொடங்கியது

1 mins read
8e70b17e-adb2-4ec9-be42-68920641cee6
சமூக சிகிச்சை வளாகத்திற்கு நேற்று கொவிட்-19 நோயாளிகள் வரத் தொடங்கினர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூ­ரின் முதல் மேம்­ப­டுத்­தப்­பட்ட கொவிட்-19 சமூக சிகிச்சை வளா­கம் (சிடி­எஃப்), நேற்று செயல்­படத் தொடங்­கி­யது. தெம்­ப­னிஸ் பகு­தி­யில் அமைந்­துள்ள அந்த வளா­கத்­திற்கு நேற்று நோயா­ளி­கள் வரத் தொடங்­கி­னர்.

சிறப்பாக ஏற்­பாடு செய்­யப்­பட்ட வாக­னங்­க­ளி­லி­ருந்து கொவிட்-19 நோயா­ளி­கள் வெளி­யேற, அவர்­களைத் தனி­ந­பர் பாது­காப்­புச் சாத­னம் (பிபிஇ) அணிந்­தி­ருந்த பணி­யா­ளர்­கள் வர­வேற்­ற­னர்.

வாக­னங்­க­ளின் ஓட்­டு­நர்­களும் அதே 'பிபிஇ'யில் காணப்­பட்­ட­னர். என்­டி­யுசி சுகா­தார தாதிமை இல்­லம் அமைந்­திருந்த இடத்­தில் புதிய 'சிடி­எஃப்' தற்­போது செயல்­ப­டு­கிறது. இங்கு 250 படுக்­கை­கள் உள்­ளன.

நல­மாக இருந்­தா­லும் அணுக்­க­மான கண்­கா­ணிப்பு தேவைப்­படும் நிலையில் வேறு சுகா­தா­ரப் பிரச்­சி­னை­கள் உள்ள கொவிட்-19 நோயா­ளி­க­ளுக்கு இந்­தப் படுக்­கை­கள் ஒதுக்­கப்­பட்­டுள்­ள­தாக சுகா­தார அமைச்சு நேற்று முன்­தி­னம் ஃபேஸ்புக் பதி­வில் குறிப்­பிட்­டி­ருந்­தது.

இதய, நரம்­பி­யல், சுவாச நோய்­கள் போன்ற நாள்­பட்ட நோய்­கள் உள்­ள­வர்­கள், முதி­ய­வர்­கள் ஆகி­யோரை இந்த வளா­கம் கண்­காணிக்­கும். அத்­து­டன் கிருமி தொற்­றிய தாதிமை இல்­ல­வா­சி­களுக்கு, இங்கு வரு­வ­தற்கு முன்­னு­ரிமை தரப்­படும்.

தீவிர சிகிச்சை அல்­லது கூடு­தல் பிரா­ண­வாயு தேவைப்­படும் நிலை­யில் உள்ள கொவிட்-19 நோயா­ளி­க­ளுக்கு அணுக்­க­மான கண்­கா­ணிப்­பும் நிபு­ணத்­துவ மருத்­து­வ கவ­னிப்­பும் அவ­சி­யம். இவர்­களுக்கு மட்­டும் மருத்­து­வ­ம­னைப் படுக்­கைகள் தயா­ராக இருப்­பதை, இத்­த­கைய மேம்­ப­டுத்­தப்­பட்ட 'சிடி­எஃப்'கள் உறுதிசெய்யும் என்று கூறப்பட்டது.

தாதிமை இல்­லங்­களில் வழக்­க­மாக இருக்­கும் மருத்­துவ, தாதி­மைப் பணி­யா­ளர்­க­ளைக் காட்­டி­லும் இந்த தெம்­ப­னிஸ் வளா­கத்­தில் கூடு­தல் ஆட்­கள் இருப்­பர். அத்­து­டன் இங்கு மருத்­து­வக் கண்­காணிப்­புச் சாத­னங்­களும் இருக்­கும் என்று அமைச்சு தெரி­வித்­தது.