சிங்கப்பூரில் புதிய உச்சமாக 1,650 பேருக்கு கொவிட்-19 தொற்று; மேலும் மூவர் உயிரிழப்பு

சிங்கப்பூரில் புதிய உச்சமாக 1,650 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானதாக சுகாதார அமைச்சு வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 24) இரவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

கடந்த ஆண்டு பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து பதிவாகியுள்ள ஆக அதிக ஒருநாள் பாதிப்பு இதுவே.

கிருமித்தொற்றுப் பாதிப்பு தொடர்ந்து நான்காவது நாளாக 1,000ஐ கடந்தது.

கிருமித்தொற்றுக்கு ஆளானவர்களில் சமூக அளவில் 1,369 பேரும் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் 277 பேரும் அடங்குவர்.

எஞ்சிய நால்வர், வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூர் வந்தவர்கள்.

இதற்கிடையே, கொவிட்-19 தொற்றால் ஏற்பட்ட உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக முதியவர்கள் மூவர் உயிரிழந்தனர். அவர்களையும் சேர்த்து, சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 73ஆக உயர்ந்துள்ளது.

மருத்துவமனைகளில் தற்போது 1,092 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 162 பேருக்குச் செயற்கை உயிர்வாயு தேவைப்படுகிறது.

தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் 23 பேர் உள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!