பாலர் பள்ளிகளில் கடும் கட்டுப்பாடு

பாலர் பள்ளிகளில் கடும் கட்டுப்பாடு

2 mins read

அதிகமான மாணவர்களும் பணியாளர்களும் கட்டாய விடுப்பில் வைக்கப்படுவர்

தடுப்­பூசி போட்­டுக்­கொண்டு இருந்­தா­லும் இல்லை என்­றா­லும் பாலர் பள்­ளி­களில் படிக்­கும் பிள்­ளை­க­ளின் பெற்­றோர் நாளை 27ஆம் தேதி முதல் பாலர் பள்­ளிக்­குச் செல்ல அனு­மதி இருக்­காது என்று பாலர் பருவ மேம்­பாட்டு அமைப்பு தெரி­வித்­துள்­ளது.

பாலர் பள்­ளி­களில் பயி­லும் குழந்­தை­க­ளின் பெற்­றோ­ருக்­கும் காப்­பா­ளர்­க­ளுக்­கும் தான் எழு­தி­யுள்ள கடி­தத்­தில், சமூ­கத்­தில் கிருமி பர­வு­வதை மட்­டுப்­ப­டுத்த கடு­மை­யான கட்­டுப்­பாட்டு நட­வடிக்­கை­களை அந்த அமைப்பு அறி­வித்­துள்­ளது.

பாலர் பள்­ளி­களை நிர்­வ­கித்து நடத்­துவதற்குத் தேவை­யான வரு­கை­யாளர்­களும் அன்­றாட நடை­மு­றை­க­ளைச் செய்­ய தேவைப்­படு­வோ­ரும் மட்­டுமே அக்­டோ­பர் 24ஆம் தேதி­வரை பாலர் பள்ளி வளா­கங்­க­ளுக்­குள் செல்­ல­லாம்.

பாலர் பள்­ளி­களில் தொற்­றைக் கட்­டுப்­ப­டுத்­த­வும் பெரிய அள­வில் தொற்­றுக் குழு­மங்­கள் ஏற்­ப­டா­மல் தடுக்­க­வும் பல­ரும் கட்­டாய விடுப்­பில் வைக்­கப்­ப­டு­வர் என்று தெரி­வித்த அந்த அமைப்பு, இது­வ­ரை­யில் பாலர் பள்­ளி­களில் ஏற்­பட்ட தொற்று பாதிப்­பு­க­ளுக்கு வீடு­களில் இருந்து கிருமி தொற்­றி­யதே கார­ணம் என்­றும் சுட்­டி­யது.

வீட்­டில் ஆறு மற்­றும் அதற்­கு­மேல் வய­துள்ள சிறார்­களில் எவ­ருக்­கே­னும் காய்ச்­சல், இரு­மல், மூக்கு ஒழு­கு­தல், தொண்டை எரிச்­சல் போன்ற அறி­கு­றி­கள் இருந்­தால் அத்­த­கைய குடும்­பங்­களைச் சேர்ந்த ஊழி­யர்­கள் அல்­லது பிள்­ளை­க­ளுக்கு இப்­போ­தைய கடு­மை­யான கட்­டுப்­பா­டு­கள் பொருந்­தும்.

வீட்­டில் யாருக்­கா­வது விரை­வுப் பரி­சோ­தனை (ஏஆர்டி) மூலம் தொற்று இருப்­ப­தா­கத் தெரி­ய­வந்­தால் அக்­கு­டும்­பத்­தைச் சேர்ந்த சிறா­ருக்­கும் ஊழி­யர்­க­ளுக்­கும் கட்­டாய விடுப்பு அளிக்­கப்­படும்.

பாதிக்­கப்­பட்ட குடும்ப உறுப்­பி­னர்க்கு 'பிசி­ஆர்' அல்­லது 'ஏஆர்டி' பரி­சோ­தனை மூலம் 'தொற்று இல்லை' என உறு­திப்­படுத்­தப்­பட்ட பின்­னரே, அவர்­கள் பள்­ளிக்­குத் திரும்ப முடி­யும்.

தனிமை உத்­த­ரவை நிறை­வேற்றி வரு­வோர், கிருமித்தொற்று நோயா­ளி­க­ளு­டன் தொடர்பு ஏற்­பட்ட நாளில் இருந்து 11வது நாளில் மட்­டுமே பள்­ளிக்­குத் திரும்­ப­லாம். என்­றா­லும் அவர்­க­ளுக்­குத் தொற்று இல்லை என்­பது சளி­மா­தி­ரிப் பரி­சோ­தனை மூலம் உறு­திசெய்யப்பட வேண்­டும்.

11ஆம் நாளில் இருந்து 14ஆம் நாள்­வரை அன்­றா­டம் அவர்­கள் 'ஏஆர்டி' பரி­சோ­தனை செய்­து­கொள்ள வேண்­டும். இந்த அன்றாட சுய­ப­ரி­சோ­த­னை­க­ளைச் செய்து­கொள்ள முடி­யாத குழந்­தை­கள், 14ஆம் நாளுக்­குப் பிறகு பள்­ளிக்­குத் திரும்பலாம்.