சிங்கப்பூரில் புதிதாக 1,939 பேர்க்கு கொரோனா தொற்று; மேலும் இருவர் உயிரிழப்பு

சிங்கப்பூரில் நேற்று 26ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை புதிதாக 1,939 பேர்க்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.


கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து ஆறாவது நாளாக ஆயிரத்திற்குமேல் பதிவாகியுள்ளது.


அத்துடன், தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 69 மற்றும் 97 வயதான பெண்கள் இருவர் கொரோனா தொற்று காரணமாக இறந்துவிட்டனர்.


இதனையடுத்து, சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் மாண்டவர்களின் எண்ணிக்கை 78 ஆனது. கடந்த ஆகஸ்ட் மாதம் கொரோனா தொற்றால் 18 பேர் உயிரிழந்த நிலையில், இம்மாதத்தில் இதுவரை 23 பேர் இறந்துவிட்டனர்.


புதிதாக பாதிக்கப்பட்டோரில் 1,536 பேர் சமூகத்தினர்; 398 பேர் தங்குவிடுதி ஊழியர்கள்.


பாதிக்கப்பட்ட உள்ளூர்வாசிகளில் 417 பேர் 60 வயதிற்கு மேற்பட்டோர்.


வெளிநாட்டில் இருந்து வந்தவர்களில் ஐவர்க்குக் கிருமித்தொற்று உறுதியானது.


சிங்கப்பூரில் இதுவரை 87,892 பேரை கொரோனா தொற்றிவிட்டது.


இப்போது, 1,203 பேர் கிருமித்தொற்றுக்காக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 172 பேர்க்குச் செயற்கை உயிர்வாயு தேவைப்படுகிறது; 30 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!