160,000 சிங்கப்பூரர்களுக்கு $100 மளிகைப்பொருள் பற்றுச்சீட்டு

கொவிட்-19 தொற்றுச் சூழலில் குடும்பச் செலவுகளைச் சமாளிக்க உதவும் வகையில், தகுதிபெறும் ஏறக்குறைய 160,000 சிங்கப்பூரர்களுக்கு அடுத்த மாதம் $100 மளிகைப்பொருள் பற்றுச்சீட்டு கொடுக்கப்படும்.


சென்ற ஆண்டில் அறிவிக்கப்பட்ட பரிவு, ஆதரவுத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த உதவி இடம்பெறுகிறது.


வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் ஓரறை மற்றும் ஈரறை வீடுகளில் வசிக்கும், ஒரு வீட்டிற்குமேல் கொண்டிராத, இந்த ஆண்டு 21 மற்றும் அதற்குமேல் வயதுள்ள சிங்கப்பூரர்கள் அனைவருக்கும் அந்தப் பற்றுச்சீட்டு கிடைக்கும் என்று நிதி அமைச்சு நேற்று ஓர் அறிக்கை மூலம் தெரிவித்தது.


மளிகைப்பொருள் பற்றுச்சீட்டுத் திட்டம் மொத்தம் ஏறத்தாழ $63 மில்லியன் மதிப்புள்ள உதவிகளைத் தகுதியுள்ளவர்களுக்கு வழங்குகிறது.


சிங்கப்பூரர்கள் சென்ற ஆண்டு $300 மதிப்புள்ள பற்றுச்சீட்டுகளைப் பெற்றனர்.


இந்த ஆண்டு பற்றுச்சீட்டுகள் அக்டோபர் 2ஆம் தேதி முதல் அடுத்த மாதம் முழுவதும் சனிக்கிழமைகளில் தகுதியுள்ள குடும்பங்களுக்கு வழங்கப்படும்.


அந்தப் பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தி ஜயன்ட், ஃபேர்பிரைஸ், பிரைம் பேரங்காடி, ஷெங் சியோங் உள்ளிட்ட பேரங்காடிகளில் மளிகைப்பொருள்களை வாங்கலாம்.


மளிகைப் பற்றுச்சீட்டுகள் சென்ற ஆண்டு வீவக புளோக்குகளில் இருக்கும் அஞ்சல் பெட்டிகளில் சேர்க்கப்பட்டு விநியோகிக்கப்பட்டன. அதில் பல பிரச்சினைகள் ஏற்பட்டன. ஆகையால், இந்த ஆண்டு பற்றுச்சீட்டுகள் வீடுகளுக்கே நேரடியாக விநியோகிக்கப்படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!