வாடிக்கையாளர்களின் தாடியை மழிக்கவோ வெட்டவோ கூடாது என்று ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாநிலத்தில் முடி திருத்தும் தொழிலைச் செய்பவர்களுக்கு அந்நாட்டை ஆட்சி செய்யும் தலிபான் அமைப்பு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
"தாடியை சவரம் செய்யக்
கூடாது என்றும் அதை அழகு
படுத்தும் வகையில் வெட்டக்
கூடாது என்றும் தலிபான் அமைப்பினர் அறிக்கை வெளியிட்டுள்ளதாக தி ஃபுரோன்டியர் போஸ்ட் தெரிவித்தது.
"முடி திருத்தும் தொழில் செய்
பவர்களை ஆப்கானிஸ்தானின் இஸ்லாமியச் சமயக் கல்வி அமைச்சின் அதிகாரிகள் சந்தித்து இந்த விதிமுறையை நிச்சயம் கடைப்
பிடிக்க வேண்டும் என்று வலி
யுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டது.
அதுமட்டுமல்லாது, முடி திருத்தும் கடைகளில் இசை, பாடல்கள் ஒலிபரப்பப்படக்கூடாது என்று
தலிபான் உத்தரவிட்டுள்ளது.
1996ஆம் ஆண்டிலிருந்து 2001ஆம் ஆண்டு வரை ஆப்
கானிஸ்தானை தலிபான் ஆட்சி செய்தபோது மிகக் கடுமையான ஷரியா சட்டம் நடப்பில் இருந்தது.
தற்போது மீண்டும் அத்தகைய சட்டங்களை அது நடைமுறைப்
படுத்தி வருகிறது.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்கப் படையினர் அண்மையில் நாடு திரும்பியதும் தலிபான் அமைப்பு மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது.