சிங்கப்பூரில் முதல் முறையாக தொடங்கப்பட்டுள்ள கொவிட்-19 சமூக சிகிச்சை நிலையத்தில் ஏறக்குறைய 75 முதியோர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையத்தை நிர்வகிக்கும் 'உட்லண்ட்ஸ் ஹெல்த்' நிறுவனத்தின் தலைமை அதிகாரி டாக்டர் வோங் கிர்க் சுவான் நேற்று தெரிவித்தார்.
கடந்த மாதம் கிருமிப் பரவல் அதிகரித்ததால் சிறப்பு சிகிச்சை நிலையம் அமைக்கப்படும் என்று செப்டம்பர் 19ஆம் தேதி சுகாதார அமைச்சு அறிவித்தது. அதன்படி புதிய சிகிச்சை நிலையம், தெம்பனிசில் உள்ள என்டியுசி சுகாதார தாதிமை இல்ல வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 23ஆம் தேதி முதல் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அங்கு அனுமதிக்கப் பட்டு வருகின்றனர்.
சுகாதார அமைச்சு கேட்டுக் கொண்டதால் கொவிட்-19 சிகிச் சைக்குப் பிரத்தியேக நிலையம் தொடங்கப்பட்டது என்று டாக்டர் வோங் குறிப்பிட்டார்.
நாட்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது போதிய நோயெதிர்ப்பு ஆற்றல் இல்லாத வர்களுக்கு நோய்த்தொற்றும் அபாயம் அதிகம். அத்தகையோர் தொற்றால் பாதிக்கப்பட்டால் இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றார் அவர்.
கிருமித்தொற்றால் பாதிக்கப் பட்டு தீவிர சிகிச்ைச தேவைப்படு வோர் எண்ணிக்கை அண்மையில் கூடியதால் மருத்துவமனைகளில் நெருக்கடி ஏற்பட்டது. இதனைச் சமாளிக்கும் விதமாக கொவிட்-19 சிகிச்சை நிலையம் அமைக்கப் பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று முன்தினம் நிலவரப்படி கொவிட்-19 தொற்றுக்கு ஆளான 72 முதல் 90 வயது வரையிலான எட்டு முதியவர்கள் இறந்துவிட்டனர்.
அவர்கள் அனைவரும் சிங்கப் பூரர்கள். ஐவர் ஆண்கள். அவர்களில் ஆறு பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை.

