மலேசியாவில் அரசு ஊழியர் களுக்குத் தடுப்பூசி கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபரில் கொவிட்-19 கட்டுப்பாடுகளை படிப்படியாக அகற்ற அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி போட வேண்டும் அரசு கட்டாயப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், மருத்துவ ரீதியாக விலக்கு அளிக்கப்படாதவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுத்தால் அவர்கள் மீது ஓழுங்கு நட வடிக்கை எடுக்கப்படும் என்று பொதுச் சேவைப் பிரிவு எச்சரித்துள்ளது.
"2021 நவம்பர் 1ஆம் ேததிக்குள் அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் தடுப்பூசி போட்டு முடித்திருக்க வேண்டும்.
"தடுப்பூசி போடாதவர்கள், அர சாங்கம் அமைத்துள்ள தடுப்பூசி நிலையங்களில் எந்த ேநரத்திலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்," என்று நேற்று ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை தெரி வித்தது.
மலேசியாவில் இதுவரை 98 விழுக்காடு மத்திய அரசு ஊழியர்கள் தடுப்பூசி போட்டு உள்ளனர்.
எஞ்சிய 16,902 பேருக்கு தடுப்பூசி தற்போது கட்டாயமாக்கப் பட்டுள்ளது.