வீவக மறுவிற்பனை வீட்டு விலை புதிய உச்சம்; நடப்பாண்டில் 8.9% உயர்வு

2 mins read

வீவக வீடு­க­ளின் மறு­விற்­பனை விலை­தொடர்ந்து ஆறா­வது காலாண்­டாக ஏற்­றம் கண்­டுள்­ளது. 2013ஆம் ஆண்­டின் இரண்­டாம் காலாண்­டில் காணப்­பட்ட உச்­சத்­திற்குமேல் 0.7% விலையேற்றம் இருந்ததாக முன்­னோடி மதிப்­பீட்டுத் தரவுகள் தெரி­விக்­கின்­றன.

ஜூலை-செப்­டம்­பர் காலாண்­டில் வீவக மறு­விற்­பனை விலை­கள் அதற்கு முந்­திய மூன்று மாதங்­களைக் காட்­டி­லும் 2.7% உயர்ந்­து­விட்­டன. ஆயினும், இவ்­வாண்­டின் முதல், இரண்­டாம் காலாண்டு­களில் காணப்­பட்ட 3% எ­னும் உயர்­வைக் காட்­டி­லும் இது சற்று குறைவு.

அதே­நே­ரம், ஆண்­டு அடிப்­ப­டை­யில் விலை­கள் 12.3% ஏறியதாக நேற்று வெளி­யி­டப்­பட்ட தரவுகள் குறிப்­பிட்­டன.

கொவிட்-19 பொரு­ளி­யல் சரி­விற்கு இடை­யி­லும் மறு­விற்­பனை விலை­கள் இவ்­வாண்டு வலு­வாக ஏற்­றம் கண்­டுள்­ளன.

கொள்ளைநோய் கார­ண­மாக ஏற்பட்ட மனி­த­வ­ளப் பற்­றாக்­குறை, புதிய வீவக வீடு­க­ளின் கட்­டு­மானத்­தில் நிகழ்ந்த தாம­தம், விநி­யோ­கத் தொடர் இடை­யூ­று­கள், சில கட்­டு­மான நிறு­வ­னங்­கள் தங்­க­ளது தொழி­லைக் கைவிட வேண்­டிய கட்­டா­யம் போன்­ற­வை­யும் விலை ஏற்­றத்­தில் பங்கு வகிக்­கின்­றன.

இது தொடர்­பாக 'இஆர்ஏ ரியால்டி' நிறு­வ­னத்­தின் ஆய்வு, ஆலோ­ச­னைப் பிரி­வின் தலை­வர் நிக்­க­லஸ் மாக் கூறு­கை­யில், "கட்டு­மா­னத் துறை­யில் நில­விய சவால்­கள், சிர­மங்­கள் மற்­றும் பற்­றாக்­குறை­கள், வீவக மறு­விற்­பனை வீடு­க­ளுக்­கான தேவையை அதி­கரித்­து­விட்­டன. அதனால், இன்­னும் குறு­கிய காலத்­திற்கு இந்த விலை ஏற்­றம் தொட­ரும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது," என்­றார்.

அதே வேளை­யில், மூன்­றாம் காலாண்­டில் 2.7% ஏறி­ய­தன் மூலம் வீவக மறு­விற்­பனை வீட்டு விலை­கள் உச்­சத்­தைத் தொட்­டு­விட்­ட­தால் படிப்­ப­டி­யான இறக்­கத்­தை­யும் காண­மு­டி­யும் என்று அவர் குறிப்­பிட்­டார்.

"காலாண்­டு­தோ­றும் மூன்று விழுக்­காடு என்­னும் விகி­தத்­தில் இந்த விலை­கள் ஏற்­றம் காண்­பது நீடித்து நிலைக்­கக்­கூ­டிய நில­வ­ரம் அல்ல. கார­ணம், இதற்­கேற்ற அள­வில் குடும்­பங்­க­ளின் சரா­சரி வரு­மா­ன­மும் இல்லை, உள்­ளூர் மக்­கள்­தொ­கை­யின் வளர்ச்சி விகி­த­மும் இல்லை," என்­றார் திரு மாக்.

வீவக மறு­விற்­பனை விலை­கள் இவ்­வாண்­டில் மட்­டும் 8.9 விழுக்­காடு உயர்ந்து இருப்­ப­தாக ஹட்­டன் ஏஷியா நிறு­வ­னத்­தின் ஆய்­வுப் பிரி­வின் மூத்த இயக்­கு­நர் லீ சே டெக் கூறி­னார்.

மேலும், 2020 இரண்­டாம் கால் ஆண்­டில் நோய்ப் பர­வல் முறி­யடிப்­புத் திட்­டம் நடப்­பிற்கு வந்­த­பின் 14 விழுக்­கா­டும் 2019 இரண்­டாம் காலாண்­டில் அடி­மட்­டத்­தைத் தொட்­ட­தி­லி­ருந்து 15 விழுக்­கா­டும் வீவக மறு­விற்­பனை வீட்டு விலை­கள் கூடி­யி­ருப்­ப­தா­க­வும் அவர் சுட்­டி­னார்.

இதற்­கி­டையே, புதிய பிடிஓ வீடு­கள் கட்டி முடிக்­கப்­படும் தேதி­யில் நிச்­ச­ய­மற்ற நிலை நீடிப்­ப­தால், அதி­க­மானோர் ஏற்­கெனவே கட்டி முடிக்­கப்­பட்ட வீடு­க­ளைத் தெரிவு செய்­வ­தாக ஆரஞ்சுடீ அண்ட் டை சொத்­துச் சந்தை நிறு­வ­னத்­தின் ஆராய்ச்சி மற்­றும் பகுப்­பாய்­வுத் துறை துணைத் தலை­வர் கிறிஸ்­டின் சன் தெரி­வித்தார்.