கொவிட்-19 தொற்றால் 66க்கும் 98 வயதுக்கும் இடைப்பட்ட 11 பேர் உயிரிழந்துவிட்டதாக சுகாதார அமைச்சு நேற்று செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 12) இரவு தெரிவித்தது.
அவர்களில் மூவர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள். அறுவர் ஒருமுறை மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள்.
கொவிட்-19 தொற்று காரணமாக சிங்கப்பூரில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 183ஆக உள்ளது.
இந்நிலையில், சிங்கப்பூரில் புதிதாக 2,976 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானது.
சமூகத்தில் 2,721 பேரும் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் 251 பேரும் அவர்களில் அடங்குவர். வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூர் வந்தவர்களில் நால்வருக்கும் தொற்று உறுதியானது.
தற்போது மருத்துவமனைகளில் 1,619 பேர் உள்ளனர். அவர்களில் 291 பேருக்குச் செயற்கை உயிர்வாயு தேவைப்படுகிறது. 42 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.