கொவிட்-19 தொற்றால் மேலும் 11 பேர் உயிரிழப்பு; புதிதாக 2,976 பேருக்குத் தொற்று

கொவிட்-19 தொற்றால் 66க்கும் 98 வயதுக்கும் இடைப்பட்ட 11 பேர் உயிரிழந்துவிட்டதாக சுகாதார அமைச்சு நேற்று செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 12) இரவு தெரிவித்தது.

அவர்களில் மூவர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள். அறுவர் ஒருமுறை மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள்.

கொவிட்-19 தொற்று காரணமாக சிங்கப்பூரில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 183ஆக உள்ளது.

இந்நிலையில், சிங்கப்பூரில் புதிதாக 2,976 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானது.

சமூகத்தில் 2,721 பேரும் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் 251 பேரும் அவர்களில் அடங்குவர். வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூர் வந்தவர்களில் நால்வருக்கும் தொற்று உறுதியானது.

தற்போது மருத்துவமனைகளில் 1,619 பேர் உள்ளனர். அவர்களில் 291 பேருக்குச் செயற்கை உயிர்வாயு தேவைப்படுகிறது. 42 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!