லாரி ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து

லாரி ஓட்டுநர் முறையாகக் கவனிக்கத் தவறியதன் காரணமாக விபத்து ஏற்பட்டு இரு உயிர்கள் பலியானதாக நேற்று நீதிமன்றத்தில் மரண விசாரணை அதிகாரி கூறினார்.

சாலை ஓரத்தில் டிப்பர் லாரி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தபோது ஊழியர்களை ஏற்றிச் சென்ற லாரி ஐந்து லாரி நீளத்திற்குப் பின்னால் இருந்தது.

உரிய நேரத்தில் கவனிக்கத் தவறியதன் காரணமாக டிப்பர் லாரியின் பின்பக்கத்தில் ஊழியர்களின் லாரி மோதியது. இவ்வாண்டு ஏப்ரல் 20ஆம் தேதி இவ்விபத்து நிகழ்ந்தது. லாரியின் பின்னால் அமர்ந்திருந்த 17 ஊழியர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். பல்வேறு காயங்கள் காரணமாக இரு ஊழியர்கள் உயிரிழந்தனர்.

லாரிக்குள் சிக்கிக்கொண்ட பங்ளாதேஷைச் சேர்ந்த டோஃபஸல் ஹுசைன், 33, மீட்கப்பட்டு இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் மாண்டார்.

இந்தியாவைச் சேர்ந்த சுகுணன் சுதீஷ்மன், 28, என்னும் ஊழியர் தேசிய பல்லைக்கழக மருத்துவமனையில் உயிரிழந்ததார்.

நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற விசாரணையில் கலந்து கொண்ட மூத்த புலன்விசாரணை அதிகாரி அஸிஸ் தஹார், லாரியை ஓட்டிச் சென்ற 36 வயது ஓட்டுநர் ஜாலான் பஹாரில் தமது அதிகாரியை ஏற்றிச் செல்வதற்காக தீவு விரைவுச் சாலையில் சென்றதாகக் கூறினார். ஓட்டுநரின் பெயர் விவரம் வெளியிடப் படவில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!