சிங்கப்பூரிலிருந்து சிட்னிக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வாரந்தோறும் விமானச் சேவைகளை வழங்குகிறது.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் அடுத்த மாதம் அதன் அனைத்துலக எல்லை களை மீண்டும் திறக்க இருக்கிறது.
இதனை முன்னிட்டு நியூ சவுத் வேல்ஸ் தலைநகர் சிட்னிக்குச் செல்லும் அனைத்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்களிலும் பயணிகள் சேவை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது சிட்னிக்கு ஒருநாளில், பயணிகள் விமானச் சேவை ஒன்றை மட்டுமே எஸ்ஐஏ வழங்கு கிறது.
மற்ற விமானங்கள் சிட்னிக்குச் சரக்குகளை
மட்டுமே ஏற்றிச் செல்கின்றன. அடுத்த மாதம் 1ஆம் தேதியிலிருந்து சிங்கப்பூருக்கும் சிட்னிக்கும் இடையிலான அதன் வாராந்திர 17 விமானச் சேவைகளில் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆஸ்திரேலியர்களும் ஆஸ்திரேலிய நிரந்தரவாசிகளும் பயணம் செய்யலாம்.