சிங்கப்பூரில் புதிதாக 3,445 பேருக்கு கொவிட்-19 தொற்று; மேலும் எண்மர் உயிரிழப்பு

சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்றால் மேலும் எண்மர் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சு நேற்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 15) இரவு தெரிவித்தது.

இறந்தவர்கள் 61க்கும் 89 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். சிங்கப்பூரர்களான அந்த எண்மரில் எழுவர் ஆடவர்கள். அந்த எண்மரில் மூவர் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள். எஞ்சிய ஐவர் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை.

தொடர்ந்து 26வது நாளாக கொவிட்-19 மரணங்கள் பதிவாகின.

இதற்கிடையே, புதிதாக 3,445 பேருக்கு கொவிட்-19 உறுதியானது. சமூகத்தில் 2,823 பேரும் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் 620 பேரும் அடங்குவர். வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்களில் இருவருக்கும் தொற்று உறுதியானது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!